மேலும் அறிய

மீண்டும் கல்லூரி செல்லலாம்; 25 ஆண்டுகள் கழித்து கல்லூரிக்கு வந்த மாணவர்கள் - சீர்காழியில் சுவாரஸ்யம்

சீர்காழி அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி பழைய மாணவர்கள் வகுப்பறையில் ஒன்று கூடி நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு சீனிவாசா சுப்பராயா பல் தொழில்நுட்பக் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு நாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்  கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 1998 வரை பயின்ற மாணவ மாணவியர் நேரில் ஒன்று கூடுவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் ஒன்று  கூடுவதென ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு, இதற்கான ஏற்பாடுகளை  நீலமேகம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கவனித்து வந்தனர்.


மீண்டும் கல்லூரி செல்லலாம்; 25 ஆண்டுகள் கழித்து கல்லூரிக்கு வந்த மாணவர்கள் - சீர்காழியில் சுவாரஸ்யம்

1995 முதல் 1998 வரை படித்த எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் இருந்தும் முன்னாள் மாணவர் மாணவியர் கல்லூரிக்கு வருகை தந்தனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரிக்குள் வந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஆற தழுவி, கட்டி அணைத்து தங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டனர். இது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் சந்தித்த இன்ப துன்பங்களயும் பகிர்ந்து  கொண்டனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களை சந்தித்து ஆசி பெற்று அன்பை வெளிப்படுத்தினர்.

Jayakumar On Annamalai: ”அதிமுக சொத்து பட்டியல், அண்ணாமலையை பார்த்து பயமெல்லாம் இல்லை” - ஜெயக்குமார் அதிரடி


மீண்டும் கல்லூரி செல்லலாம்; 25 ஆண்டுகள் கழித்து கல்லூரிக்கு வந்த மாணவர்கள் - சீர்காழியில் சுவாரஸ்யம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைக் கண்ட மகிழ்ச்சியில் அனைவரும் ஒருவரை ஒருவர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பிறகு தாங்கள் பயின்ற வகுப்பறைகளையும் நண்பர்களுடன் நடமாடிய இடங்களையும் நடந்து சென்று பார்வையிட்டு பசுமை மாறா நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்டு மகிழ்ந்தனர். சந்திப்பு நிறைவடைந்து அனைவரும் பிரிய மனமின்றி கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்று சென்றனர்.

தமிழ் மொழி மீது பிரதமருக்கு பற்றிருந்தால் தமிழுக்காக ஒரு மத்திய பல்கலை.,- ஐ உருவாக்கட்டும் - எம்.பி ரவிக்குமார்


மீண்டும் கல்லூரி செல்லலாம்; 25 ஆண்டுகள் கழித்து கல்லூரிக்கு வந்த மாணவர்கள் - சீர்காழியில் சுவாரஸ்யம்

மேலும் இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், கால ஓட்டத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாதைகளில் பல்வேறு திசைகளில் பிரிந்து சென்றுள்ள இந்த நிலையில் தற்போது அனைவரும் ஒன்று கூடி மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, வேலை, தொழில், குடும்பம் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு அழகியுள்ள தங்களுக்கு இது பெரும் அருமருந்தாக அமைந்தது என கூறினர்.

Leaders Wishing ABPNadu: 3 ஆம் ஆண்டில் நடைபோடும் ABP நாடு.. குவிந்த அன்பான வாழ்த்துகள்.. பாராட்டுகளை பொழிந்த தலைவர்கள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
HOLIDAY: கொத்தாக டிசம்பரில் வரும் தொடர் விடுமுறை... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
கொத்தாக டிசம்பரில் வரும் தொடர் விடுமுறை... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
இன்னும் 2 நாள் தான்.. இதை மட்டும் செய்யலைனா வங்கி கணக்கு முடங்கிடும். எந்த வங்கி தெரியுமா.?
இன்னும் 2 நாள் தான்.. இதை மட்டும் செய்யலைனா வங்கி கணக்கு முடங்கிடும். எந்த வங்கி தெரியுமா.?
Cyclone Ditwah; நெருங்கும் 'டிட்வா' புயல்.! இன்று 6 மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
நெருங்கும் 'டிட்வா' புயல்.! இன்று 6 மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
Embed widget