மேலும் அறிய

Jayakumar On Annamalai: ”அதிமுக சொத்து பட்டியல், அண்ணாமலையை பார்த்து பயமெல்லாம் இல்லை” - ஜெயக்குமார் அதிரடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து தனக்கு பயமில்லை என, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து தனக்கு பயமில்லை என, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு:

சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது மற்றும் முன்னாள் ஆளும்கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அவர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் ”திமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது நல்ல விஷயம். அதேநேரம், தற்போது திமுக பற்றி மட்டுமே கூறியிருக்கிறார், அண்ணாமலை அதிமுக சொத்துப்பட்டியல் என்று முன்னாள் அமைச்சர்கள் அல்லது அதிமுக சார்ந்தவர்களின் சொத்துப்படியலை வெளியிட்டாள் அனைத்தையும் சந்திக்க தயாராக உள்ளோம். அதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆட்கள் நாங்கள் இல்லை. மறைமுகமாக மிரட்டும் வேலை எல்லாம் எங்களிடம் நடக்காது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை” என கூறினார்.

இந்த அரசியல் சரிபட்டு வராது -அண்ணாமலை

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ”எதற்கும் துணிந்து தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் உக்கிரமாக இருக்கிறேன். மாலையை போடுவது, கும்புடு போடுவது, தேர்தலின் போது ஒன்றாக சேர்வது போன்ற அரசியல் எனக்கு சரிபட்டு வராது. ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையில் இருந்து எதிர்க்க வேண்டும் என்கிற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். அதனால் இப்போது நீங்கள் பார்த்த திமுக ஃபைல்ஸ் பகுதி ஒன்றுடன் நிற்கப்போவதில்லை. தமிழ்நாடு அரசில் இதுவரை எந்த கட்சிகள் எல்லாம் அமர்ந்து இருக்கிறதோ, அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்பலப்படுத்தப்படும். 

முடிந்தால் அண்ணாமலையை மாற்றுங்கள்

காரணம் ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் மொத்தமாக தான் எதிர்க்க வேண்டும்.  பாதி எல்லாம் எதிர்த்தால் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வராது. அதனால் அத்தனை பேரையும் எதிர்ப்போம். அப்படி எதிர்க்கக் கூடாது என நினைப்பவர்கள் டெல்லிக்கு சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். ஆனால் அண்ணாமலை இருக்கும் வரை எதிர்ப்பான். சக்தி இருக்கு, திராணி இருக்கு என நினைப்பவர்கள் சென்று அண்ணாமலையை மாற்றி விட்டு வாருங்கள். காரணம் இது மோடி விரும்புகிற அரசியல், நான் விரும்புகிற அரசியல் கிடையாது. யாருக்கும் பயந்தோ, பணிந்தோ, குணிந்தோ அவர்கள் தயவில் எம்.பி., எம்.எல்.ஏ ஆகவேண்டியதில்லை.  

பார்ட்-4 வரை நீளும் ஊழல் பட்டியல்:

மின்சாரத்தை தொட்டுவிட்டோம் இனி அதை விட முடியாது. பார்ட் ஒன்றுடன் நிறுத்த முடியாது. இனி பார்ட் 2, பார்ட் 3 மற்றும் பார்ட் 3 என, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மேலும் 3 பார்ட் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். வேறு வேறு கட்சிகளையும் இதில் கொண்டு வரத்தான் போகிறோம்” என பேசியிருந்தார். இதில் திமுகவை காட்டிலும், தற்போது தங்களது கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவை தான் மறைமுகமாக அண்ணாமலை அதிகம் சாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான், அண்ணாமலையை கண்டு நாங்கள் பயப்படமாட்டோம் என அதிமுக சார்பில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் சந்திக்கும் சிக்கல்கள் இவ்வளவா? தீர்வு காணுமா தவெக அரசு?
ABP Exclusive: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் சந்திக்கும் சிக்கல்கள் இவ்வளவா? தீர்வு காணுமா தவெக அரசு?
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு எப்படி? - வானிலை வார்னிங்
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு எப்படி? - வானிலை வார்னிங்
நீட் போராட்டத்தில் GenZ திமுக-வினரை விரட்டிவிட்ட மாணவர்கள்! நடந்தது என்ன?
நீட் போராட்டத்தில் GenZ திமுக-வினரை விரட்டிவிட்ட மாணவர்கள்! நடந்தது என்ன?
திமுக, அதிமுகவுக்குப் பின்னடைவா? சீர்காழியில் கொத்துக் கொத்தாகத் தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்.
திமுக, அதிமுகவுக்குப் பின்னடைவா? சீர்காழியில் கொத்துக் கொத்தாகத் தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்.

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Embed widget