மேலும் அறிய

சம்பா அறுவடையின் போது இப்படி ஒரு சிக்கலா? தவிக்கும் விவசாயிகள்: காரணம் என்ன?

தஞ்சை, ஆலக்குடி, வல்லம், சிவகாமிபுரம், 8நம்பர் கரம்பை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையினரின் தொடர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். குறுவை சாகுபடியின் போது சாக்குகள் பற்றாக்குறை, மழையால் நெல்மணிகள் நனைந்து பொருளாதார இழப்பு ஏற்பட்டது போல் இப்போதும் ஆகிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்து  நெல்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி 3.50 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை சுமார் 1.70 லட்சம் ஏக்கரில் அறுவடைப்பணிகள் முடிந்துள்ளது.


சம்பா அறுவடையின் போது இப்படி ஒரு சிக்கலா? தவிக்கும் விவசாயிகள்: காரணம் என்ன?

வயல்கள் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பெல்ட் அறுவடை இயந்திரங்கள் மட்டுமே அறுவடைப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் குறைந்த பரப்பளவில் மட்டுமே அறுவடை நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது வயல்களில் ஈரப்பதம் குறைந்துள்ளது. இதனால் டயர் பொறுத்தப்பட்ட பெரிய இயந்திரங்களும் தற்போது நெல் அறுவடைப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் தஞ்சை, ஆலக்குடி, வல்லம், சிவகாமிபுரம், 8நம்பர் கரம்பை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. இதையடுத்து  விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதையடுத்து விவசாயிகள் நெல்களை அரசு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடங்கல் பெற்று கொள்முதல் நிலைய கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் நெல்களை விற்பனை செய்ய முடியும். இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடங்கல் சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வருவாய்த் துறையினரின் காலவரையற்ற போராட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளதால், சம்பா பருவத்தில் அறுவடை செய்த நெல்லை விற்க கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்று பெற முடியாததால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. குறுவையில் ஏற்பட்ட நெருக்கடி போல் சம்பாவிலும ஏற்பட வாய்ப்புள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்களை கொட்டி வைத்து தொடர்ந்து காத்து வருகின்றனர். மேலும் உடனடியாக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி தஞ்சையை அடுத்த ஆலக்குடி உட்பட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோழகிரிப்பட்டி விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் வெகு மும்முரம் அடைந்துள்ளது. இந்த நேரத்தில் வருவாய்துறை அலுவலர்கள் தொடர் போராட்டத்தால் அடங்கல் பெற்று நெல்லை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை அறுவடையின் போது சாக்கு பற்றாக்குறை உட்பட பல காரணங்களால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இப்போது சம்பா அறுவடை மும்முரம் அடைந்துள்ள நிலையில் தொடர் போராட்டத்தால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. போராட்டம் முடிவுக்கு வரும் வரை அடங்கல் இன்றி நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: அவங்க அப்பாவால் கூட அது முடியவில்லை… திமுக குறித்து விஜய் கடும் விமர்சனம்
அவங்க அப்பாவால் கூட அது முடியவில்லை… திமுக குறித்து விஜய் கடும் விமர்சனம்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 2 கட்சிகளும் உள்ளன... எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தகவல்
காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 2 கட்சிகளும் உள்ளன... எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Embed widget