மேலும் அறிய

Kamaraj: முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிராக 810 பக்க குற்றப்பத்திரிகை, 18,150 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு எதிராக 810 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர். காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை மாதம் 2021 ஆம் ஆண்டு அவரது வீடு மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என  தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வழக்கு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கடந்த 07.07.2022 ஆம் ஆண்டு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்கள் இனியன், இன்பன்  நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் உதயகுமார் ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கடந்த 01.04.2015 நாள் முதல் 31.03.2021 வரை அமைச்சராக காமராஜ் பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும் அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவர்களின் நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து மொத்தம் 58 கோடியே 44 லட்சத்து 38,252 ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் சார்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளால் 5 வருடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

Kamaraj: முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிராக 810 பக்க குற்றப்பத்திரிகை, 18,150 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்
 
மேலும், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோரின் உடந்தையுடன் தஞ்சாவூரில் என்.ஏ ஆர் சி ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது மகன்களான இனியன், இன்பன் ஆகியோரின் பெயர்களில் தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் என்கிற பெயரில் ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனை கட்டியும் இதர வகைகளிலும் 127 கோடியே 49 லட்சத்து 9085 ரூபாய் அளவிற்கு தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
 
இந்த வழக்கில் புலன் விசாரணை தற்போது முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவரிடம் இசைவாணை பெற்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை சிறப்பு நீதிபதி நீதிமன்றத்தில், காமராஜ் அவரது மகன்கள் இனியன் இன்பன் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 1988 மற்றும் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் படி உரிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த குற்றப்பத்திரிகை 810 பக்கங்கள் கொண்டது. அதனுடன் 18,150 ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை  மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget