மேலும் அறிய

வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!

சிலர் கூறுவதுபோல் மூன்றாம் மொழியைக் கற்க வேண்டும் என்ற கோரிக்கை உண்மையான இருந்திருந்தால், நம் மக்கள் ஏன் மாநில வாரியப் பள்ளிகளைத் தொடர்ந்து தேர்வு செய்கிறார்கள்?- அமைச்சர் அன்பில் மகேஸ்

நாடாளுமன்றத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு, தமிழ்நாட்டில் எதிர்வினைகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவு:

’’உடையாததை ஒட்ட வைக்கப் பார்க்காதீர்கள்; தமிழ்நாட்டு கல்வி முறை அளிப்பதை தேசிய கல்விக் கொள்கை தடுக்கிறது. தேசிய கல்விக்கொள்கை மற்று மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விமர்சிப்பது, தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல் உண்மையை முற்றிலுமாக புறக்கணிக்கிறது.

இது தமிழ் மொழியைப் பற்றியது மட்டுமல்ல, பரிசோதிக்கப்பட்டு, பல்லாண்டுகளாக வெற்றிகரமாக உள்ள கல்வி முறையைப் பற்றியது.

தமிழ்நாடு மாடல்

எங்களின் மாநிலக் கல்வி வாரியம், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பான முடிவுகளைத் தொடர்ந்து அளித்து வருகிறது. இந்தியா முழுக்கவும் வெளிநாடுகளிலும் எங்களின் மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக ஜொலித்து வருகிறார்கள்.

எந்தெந்தப் பள்ளிகளில் எவ்வளவு பேர்?

தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரிய பள்ளிகள் 58,779-ல் சுமார் 1.09 கோடி மணவர்கள் படித்து வரும் நிலையில், 1635 சிபிஎஸ்இ பள்ளிகளில் வெறும் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள்.

இதனால் தமிழக மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. சிலர் கூறுவதுபோல் மூன்றாம் மொழியைக் கற்க வேண்டும் என்ற கோரிக்கை உண்மையான இருந்திருந்தால், நம் மக்கள் ஏன் மாநில வாரியப் பள்ளிகளைத் தொடர்ந்து தேர்வு செய்கிறார்கள்? மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு மதிப்போம்.

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையின் ஒரு பகுதியாக ஆங்கிலம் ஏற்கனவே உள்ளது. அது, மாணவர்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தைப் பேணுகையில் உலகளாவிய வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.

வெறும் மொழி மட்டும் கிடையாது

தமிழ் என்பது வெறும் மொழி மட்டும் கிடையாது. அது நமது வேர்கள், வரலாறு மற்றும் விழுமியங்களுடன் தொடர்புடையது.

மூன்றாவது மொழியை திணிப்பதைப் போலன்றி, இந்த முறை மாணவர்கள் உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்திலும், கலாச்சார நெறிமுறைகளுக்காக தமிழிலும் தேர்ச்சி பெற அனுமதிக்கிறது. ஆங்கில வழிப் பள்ளிகளில் கூட, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். நமது பெருமைக்கு தமிழ், உலக வழிகாட்டியாக ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே நமது முன்னேற்றம் மற்றும் சமத்துவத்திற்கான பாதை.

கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை

நமது மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, ​​தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை.

மத்தியக் கல்வி அமைச்சரிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், ஏன் மாற்றத்தை கட்டாயப்படுத்த வேண்டும்?

அனைவருக்கும் பொருந்தக்கூடிய, தேசிய கல்விக் கொள்கையைவிட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்?

தமிழ்நாடு, தனது மாணவர்களுக்கு எது தேவை? எது சிறந்தது? என்பதில் சமரசம் செய்யாது. தயவுசெய்து எங்களின் கல்வி அமைப்பை சீர்குலைக்காதீர்கள்’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?
Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?
Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?
பெங்களூரில் பட்டப்பகலில் 7 கோடி கொள்ளை! RBI அதிகாரிகள் போல் நடித்து அதிர்ச்சி கொடுத்த கும்பல்!
பெங்களூரில் பட்டப்பகலில் 7 கோடி கொள்ளை! RBI அதிகாரிகள் போல் நடித்து அதிர்ச்சி கொடுத்த கும்பல்!
Kanchipuram Exports: காஞ்சிபுரம் சாதனை ஏற்றுமதியில் முதலிடம்! 1.08 லட்சம் கோடி ஏற்றுமதி! டாப் 10 லிஸ்ட் இதோ!
Kanchipuram Exports: காஞ்சிபுரம் சாதனை ஏற்றுமதியில் முதலிடம்! 1.08 லட்சம் கோடி ஏற்றுமதி! டாப் 10 லிஸ்ட் இதோ!
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Embed widget