மேலும் அறிய

பஞ்சாப், சிந்து வங்கியில் 190 காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு: உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க

காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளத்துடன் கொடுப்பனை மற்றும் அகவிலைப்படி உண்டு.

தஞ்சாவூர்: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 190 காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது. என்னென்ன காலிப்பணியிடம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் கிரெடிட் மேனேஜர் மற்றும் வேளாண் மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வழக்கமான அடிப்படையில் சிறப்பு அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. கிரெடிட் மேனேஜர் பதவியில் 130 காலிப்பணியிடங்கள், வேளாண்மை மேனேஜர் பதவியில் 60 பணியிடங்கள் என நிரப்பப்படுகிறது.

கிரெடிட் மேனேஜர் 130
வேளாண்மை மேனேஜர் 60 என மொத்தம் 190 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் எஸ்சி - 28, எஸ்டி - 13, ஒபிசி - 51, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் - 19, பொதுப்பிரிவு - 79 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

01.09.2025 தேதியின்படி, விண்ணப்பதார்களின் குறைந்தபட்ச வயது 23 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியாக விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதார் 02.09.1990 தேதிக்கு முன்னர் பிறந்திருக்கக்கூடாது. அதே போன்று, 01.09.2000 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது. வயது வரம்பு 5 வருடங்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் 3 வருடங்கள் ஒபிசி பிரிவினருக்கு தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது.

அதே போன்று, கல்வித்தகுதியை பொறுத்தவரை, கிரெடிட் மேனேஜர் அப்பதவிக்கு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA/CMA/CFA/MBA ஆகியவற்றை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

வேளாண் மேனேஜர் பதவிக்கு வேளாண் சார்ந்த படிப்புகளாக விவசாயம், தோட்டக்கலை, டெய்ரி, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல் ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் தேவை. எஸ்டி, எஸ்சி, ஒபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு 55 சதவீதம் தளர்வு உள்ளது.

காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளத்துடன் கொடுப்பனை மற்றும் அகவிலைப்படி உண்டு. இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, தேர்வு செய்தல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், பொது அறிவு, பணிக்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 100 கேள்விகளுடன் தேர்வு நடைபெறும். இதில் பொதுப்பிரிவினர் 40 சதவீதமும், இதர பிரிவினர் 35 சதவீதமும் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். அதனைத்தொடர்ந்து, தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதியாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.  தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் வங்கியின் https://punjabandsind.bank.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு கடந்த 19-ம் தேதி முதலே விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget