மேலும் அறிய

தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?

பெரிய கோயில் கோபுரத்தின் உச்சியில் ஒளிரும் விளக்கு தஞ்சை மாநகரம் மட்டுமின்றி பைபாஸ் சாலையில் இருந்து பார்த்தாலும் கோயில் பளிச்சென்று தெரியும் வகையில் இருந்து வந்தது.

தஞ்சாவூர்: கடந்த ஒருமாதமாக தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தின் உச்சியில் மின் விளக்கு எரியாமல் உள்ளது எந்த அதிகாரிகளின் கண்ணிலும் படவில்லையா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோயில் என்றாலே போதும் உலக மக்கள் மத்தியில் வெகு பிரசித்தம். தஞ்சை தரணி மக்களாலும் உலக தமிழர்களாலும் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பெரிய கோயில் என்கிற பிரகதீஸ்வரர் கோவில் கி.பி 1006ம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டது. இன்றளவும் தமிழரின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக விண்ணுயர்ந்து யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இக்கோயில் உலக நாட்டவர்களையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் கட்டுமானம்தான் என்றால் மிகையில்லை. பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் துணையுடன் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்தாலும் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல்தான் உள்ளனர். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை.

இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் 20ம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற நினைப்பை முறியடித்து சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தானே.

கருவறையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். கோயிலின் கட்டுமானத்தில் அடியிலிருந்து கற்களை ஒவ்வொன்றாக நூலளவு இடைவெளி விட்டு மிகவும் இலகுவாக அடுக்கும்போது, கற்கள் பாரம் தாங்காமல் இறுக ஆரம்பித்து விடும். இந்த தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். முழு கட்டுமானத்தையும் முடித்து கருவறை உச்சியில், மிகப்பிரமாண்டமான 80 டன் எடைகொண்ட, சதுர வடிவ கல், நந்தி, விமானம் என 240 டன் எடையை அழுந்தச் செய்வதன் மூலமாக பெரிய கோவிலின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பலம் பெற்றுவிடும். இப்படித்தான் பெரிய கோவிலின் அஸ்திவாரத்தை ஒட்டுமொத்தமாக கருவறை உச்சியில் கொண்டுபோய் வைத்தார்கள் அன்றைய நம் தமிழர்கள். இத்தகைய அதிசயங்களையும், அற்புதங்களையும் தன்னுள் கொண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் எழுப்பிய பெரிய கோயில், வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற ஒன்றாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலுக்கு தினமும், காலை, மாலை, இரவு என வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பெரிய கோயில் கோபுரத்தின் உச்சியில் ஒளிரும் விளக்கு தஞ்சை மாநகரம் மட்டுமின்றி பைபாஸ் சாலையில் இருந்து பார்த்தாலும் கோயில் பளிச்சென்று தெரியும் வகையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கோபுரத்தில் எரிந்து வந்த விளக்கு கடந்த ஒருமாதமாக எரியவில்லை. இதனால் கோயிலை சுற்றிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எப்போதும் பளிச்சென்று இருக்கும் பெரிய கோயில் பகுதி தற்போது இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரத்தில் கோபுர தரிசனம் பார்க்க வரும் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக இதே நிலை நீடிக்கிறது. இது எந்த அதிகாரிகளின் கண்ணிலும் படவில்லையா. ஏன் உடனடியாக இந்த விளக்கை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பக்தர் கேள்வி எழுப்புகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி
விவசாயிகளின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி
தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்!
தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்!
தஞ்சாவூருக்கு மீண்டும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில் வருகை! கொல்லம், சபரிமலை பக்தர்களுக்கு மீண்டும் நேரடி இணைப்பு!
தஞ்சாவூருக்கு மீண்டும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில் வருகை! கொல்லம், சபரிமலை பக்தர்களுக்கு மீண்டும் நேரடி இணைப்பு!
திருவையாறு தொகுதிக்கு புது ரத்தம் பாய்ச்சுமா தலைமை? கடம்பன்குடி சீனிவாசன் வாய்ப்பு கிடைக்குமா?
திருவையாறு தொகுதிக்கு புது ரத்தம் பாய்ச்சுமா தலைமை? கடம்பன்குடி சீனிவாசன் வாய்ப்பு கிடைக்குமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
Diesel Price Hike India: தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
Happy Ramadan Wishes 2026: ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
Embed widget