TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி சென்றபோது ஆதவ் அர்ஜுனா கைப்பையில் மதுபாட்டில் இருந்தது குறித்து வெளியான தகவலுக்கு தவெக விளக்கம் அளித்துள்ளது.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் டெல்லிக்கு இன்று தனி விமானம் மூலமாக புறப்பட்டுச் சென்றார்.
சரக்கு பாட்டில் இருந்ததா?
அவர் சென்னை விமான நிலையத்தில் சிறப்பு வாயில் வாயிலாக தனி விமானத்திற்குச் சென்றார். அவருடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உடன் சென்றார். அப்போது, ஆதவ் அர்ஜுனாவின் கைப்பையில் உயர்ரக மதுபானம் இருந்ததாகவும், இதனால் விஜய் புறப்பட்ட விமானம் அரைமணி நேரம் தாமதமாகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, விஜய்யின் கைப்பையில் கத்தரிக்கோல் இருந்ததால் விஜய் புறப்படும் விமானம் அரைமணி நேரம் தாமதமானதாக தகவல் வெளியானது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தவெக விளக்கம் என்ன?
சிடிஆர் நிர்மல்குமார் இது முற்றிலும் பொய்யான தகவல். இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.
வரும் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக-விற்கும், எதிர்க்கட்சியான அதிமுக-விற்கும் விஜய்யின் தவெக கடும் சவால் அளிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கருத்துக்கணிப்பின்படி, 18 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை வைத்துள்ள விஜய் யாருடைய வாக்குகளை பிரிக்கிறாரோ? அவர்கள் படுதோல்வி அடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வலுக்கும் சிபிஐ விசாரணை:
இதனால், தற்போது வரை திரைமறைவில் விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது. அதற்கு சிபிஐ- விசாரணையை ஒரு கருவியாகவும் பயன்படுத்துவதாகவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தல் சமயம் நெருங்கும் நேரத்தில் விஜய் மீதான சிபிஐ விசாரணை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் தேர்தலில் விஜய்யின் வாக்கு சதவீதம் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம், அவரது விவாகரத்து வழக்கு போன்ற விவகாரங்கள் விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளிகளாக மாறியுள்ளது. அதை எவ்வாறு அவர் கடந்து வருவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















