மேலும் அறிய

விவசாயிகளின் வியர்வை... கடந்த ஆண்டை விட இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடியில் நடந்துள்ள சாதனை

தற்போது குறுவை சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 797 எக்கரில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: அதிகம்ங்க... கடந்த ஆண்டை விட அதிகம்ங்க... கடுமையான உழைப்பை கொடுத்த விவசாயிகளின் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 1 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகசூல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தவுடன் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் ஜூன் 15ந் தேதி தண்ணீர் பிரித்து விடப்பட்டது.

இதையடுத்து பாசன வாய்க்கால்களில் தண்ணீர் கடைமடை பகுதியை சென்றடையும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து குறுவை சாகுபடி பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. நடவு மூலமும், நேரடி நெல் விதைப்பு மூலமும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் இடுபொருட்களும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன.

அதன்படி ஜூலை மாதம் இறுதிவரை குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படும் என வேளாண்மைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி தற்போது குறுவை சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 797 எக்கரில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்மூலம் நடப்பு ஆண்டு டெல்டா மாவட்டங்களில் இலக்கை தாண்டி குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 125 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது இலக்கை தாண்டி 1 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது 6 ஆயிரத்து 375 ஏக்கர் கூடுதல் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது விவசாயிகளின் கடுமையான உழைப்பை காட்டுகிறது.

தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 1 லட்சம் ஏக்கரில் குறுவை அறுவடைபணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது எக்டேருக்கு 5,700 கிலோ சராசரியாக மகசூல் கிடைத்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக எக்டேருக்கு 7 ஆயிரத்து 510 கிலோவும், குறைந்த அளவாக எக்டேருக்கு 4 ஆயிரத்து 180 கிலோவும் மகசூல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு குறுவையில் எக்டேருக்கு 4 ஆயிரத்து 850 கிலோ மகசூல் சராசரியாக கிடைத்தது. தற்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 850 கிலோ மகசூல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 7 ஆயிரத்து 623 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான விதை நெல், உரம், வேளாண் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஏ.டி.டி 51, சி.ஆர். -1009, சி.ஆர். 1009 சப்-1, ஏ.டி.டி 54, ஏ.டி.டி. 52, கோ-50 பி.பி.வி. 5204 போன்ற ரகங்கள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவுப்பணிகள் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வரை 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவுப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற பகுதிகளில் நடவுப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget