DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 7 தொகுதிகளில் அவர்களது செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் திமுக-வே இந்த முறை அந்த தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக கூட்டணி பங்கீட்டில் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வே எடுத்த திமுக:
தொகுதி பங்கீட்டில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட வேண்டும்? என்பதையும் திமுக தலைமையே தேர்வு செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள முதன்மையான கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற பட்டியலை காங்கிரஸ் தீவிரமாக தயாரித்து வருகிறது.
7 தொகுதிகளுக்கு நோ:
அதேசமயம், காங்கிரஸ் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகளை திமுக தலைமை ஆய்வு நடத்தியுள்ளது. அதில் ஊட்டி, விருத்தாச்சலம், அறந்தாங்கி, நாங்குநேரி, சிவகாசி, தென்காசி மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகள் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளில் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இந்த முறை இதே தொகுதிகளை காங்கிரஸ் திமுக-விடம் கேட்டால் அதற்கு மறுப்பு தெரிவிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதிகளில் நேரடியாக திமுக வேட்பாளர்களையே களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் திமுக-விற்கு அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய 3 கட்சிகளும் போட்டியாக களமிறங்குவதால் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தேர்விலும், தொகுதி ஒதுக்கீட்டிலும் தீவிர கவனம் செலுத்த திமுக முடிவு செய்துள்ளது.
அதேபோல, காங்கிரஸ் கட்சியினரும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை மட்டுமே களத்தில் நிறுத்தி தங்களது பலத்தை நிரூபிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால், காங்கிரஸ் தரப்பிலும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர். குறைந்தது 28ல் 25 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகள் ஒதுக்கீடு போன்ற பல்வேறு கோரிக்கைகள் மூலமாக திமுக-விற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. தவெக-வை காரணம் காட்டி திமுக-விற்கு தொடர்ந்து அழுத்தம் தந்த காங்கிரஸ் 28 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா தொகுதி என்ற உடன்பாட்டிற்கு இறுதியில் கூட்டணியில் நீடிக்க ஒப்புக்கொண்டது.
திமுக முடிவு:
காங்கிரஸ் மட்டுமின்றி மற்ற கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்ற தொகுதிகளிலும் அவர்களது செயல்பாடுகளை திமுக தலைமை ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையிலே அந்தந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Before You Go
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
ட்ரெண்டிங் செய்திகள்






















