மேலும் அறிய

தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !

தமிழகத்தில் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து எதையும் கட்டுப்படுத்தவில்லை. காவல்துறை ஏவல் திமுகவின் ஏவல் துறையாக மாறிவிட்டது. - வி.வி.ஆர்.ராஜ்சத்யன் குற்றச்சாட்டு.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாணவி சம்பவம் மற்றோரு நிர்பயா சம்பவம் போன்று உள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்‌ ராஜ்சத்யன் தலைமையில், தூத்துக்குடி நிர்பயா என்று வாயில் கருப்புக் துணி கட்டி கொண்டு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

அதிமுக ஐடிவிங் சார்பில் ஆர்ப்பாட்டம்
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அருகே தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி. வி ஆர் ராஜ்சத்யன் தலைமையில் வாயில் கருப்பு கொடி கட்டி நீதி வேண்டும் என்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறியதாவது...,” நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை ஒரு சகோதரனாக, தந்தையாக ஒரு இளம் சிறுமிக்கு ஏற்பட்ட துயரத்திற்கு நீதி கேட்டு வந்துள்ளேன். நடைபெற்ற சம்பவத்தை பார்க்கும் பொழுது தமிழகத்தில் சமுதாய சீர்கேடு நடைபெற்று உள்ளது. ஒரு பெண் குழந்தை பட்டப்பகலில் வெளியே நட முடியாத அளவில் வெட்கக்கேடாக தமிழகம் உள்ளது. இதனால் தமிழகம் புரையோடி போய் உள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரங்களில் மட்டும் 15 பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு அடிப்படை காரணம் போதைப் பொருள் கலாச்சாரமாகும்  காவல்துறை  இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தை போல தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதால் தூத்துக்குடி நிர்பயா என்ற பெயரில் கவனயீர்ப்பு போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் 9.30 மணிக்கு குழந்தை வரவில்லை என்று புகார் கொடுக்க செல்கிறார்கள் ஆனால் காவல்துறை எங்க லிமிட் இல்லை என்று அலட்சியம் காட்டி சந்தேக கண்ணுடன் மிகவும் மோசமாக வார்த்தைகளை கூறியுள்ளனர். அந்த காவல்துறையினர் மீது சஸ்பெண்ட் என்று கண்டு துடைப்பாக நடவடிக்கை எடுத்துள்ளனர் இது குற்றவியல் சம்பவமாக பார்க்க வேண்டாமா ?
 
சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பை பூசிமொழுக பார்க்கிறார்கள்.
 
இதையெல்லாம் முதலமைச்சர் கண்டுகொள்ளாமல்  போட்டோ சூட் நடத்துகிறார். ஆனால் எடப்பாடியார் இன்றைக்கு களத்தில் சென்றுள்ளார் இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது, தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலமாகவும் இதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதே போல முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்து மூன்று நாட்கள் களத்தில் இருக்கிறார். ஆனால் முதலமைச்சர் தங்களுக்கு வேண்டிய கருத்துக்களை மீம்ஸ் கருத்துக்களை போட்டு ரிலீஸ்களை நடத்துகிறார். இன்றைக்கு தமிழகத்தில் ஒரு சமுதாய சீரழிவு ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு காவல்துறை பின்னோக்கி சென்று விட்டது‌. தமிழகம் 50 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்று விட்டடது. கலாச்சாரத்தால்  தமிழகத்திற்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது  சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெற்றது வேதனைக்குரிய சம்பமாகும். குறிப்பாக நிரந்தர டிஜிபி கூட இன்னும் நியமிக்கவில்லை. ஒரு பொறுப்பு டிஜிபி போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது ஆனால் பாலியல் குற்றங்கள் குறைந்து விட்டது என்று தற்போது பல்வேறு விளக்கங்களை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் மூலம் சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பை பூசிமொழுக பார்க்கிறார்கள். இன்றைக்கு அந்த சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை நாளைக்கு யாருக்கு வேணாலும் ஏற்படலாம். இந்த சம்பவத்தை கூட திமுகவின் கூட்டணி கட்சிகள்  எதையும் பேசவில்லை எல்லாம் கூட்டணிக்காக தான்.  ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி சம்பவம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது. அதேபோல மதுராந்தகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் குற்ற பதிவேடுகளில் உள்ள குற்றவாளிகள் இது போன்ற குற்றங்களை செய்தனர். இந்த குற்றப் பதிவேடு குற்றவாளிகளை சுதந்திரமாக விட்டது யார்? இன்றைக்கு முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது தனது தங்கை கனிமொழி வைத்து சரி செய்ய முயன்ற போது அப்பகுதி மக்கள் கனிமொழியை விரட்டினர்” எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"சிவனின் இளைய மகன் பெயர்கொண்டவரே மீண்டும் முதல்வர்" - ஓலைச்சுவடி ஆருடத்தால் பரபரப்பு!
Selvaperunthagai Congress : தொங்கு சட்டசபை வந்தால் ஆட்சியில் பங்கா.?? காங்கிரஸ் நிலை என்ன.? செல்வப்பெருந்தகை பதில்
தொங்கு சட்டசபை வந்தால் ஆட்சியில் பங்கா.?? காங்கிரஸ் நிலை என்ன.? செல்வப்பெருந்தகை பதில்
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
Election results child safety : பெற்றோர்களே உஷார்.! தேர்தல் முடிவு வரப்போகுது கவனமாக இருங்க- குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அலர்ட்
பெற்றோர்களே உஷார்.! தேர்தல் முடிவு வரப்போகுது கவனமாக இருங்க- குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அலர்ட்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!
TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!
"8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!" – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?
RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?
MRTS Metro Merger: வரப்போகுது புதிய வசதிகள்.. சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ இணைப்புக்கு விரைவில் இறுதி ஒப்புதல்!
MRTS Metro Merger: வரப்போகுது புதிய வசதிகள்.. சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ இணைப்புக்கு விரைவில் இறுதி ஒப்புதல்!
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை எப்போது? மே 2ஆம் வாரத்தில் தொடங்கும் விண்ணப்பப் பதிவு
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை எப்போது? மே 2ஆம் வாரத்தில் தொடங்கும் விண்ணப்பப் பதிவு
Embed widget