மேலும் அறிய

’பேசாம பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்’ - மலேசிய மணலால் தமிழக அரசுக்கு வந்த வினை...!

’’தூத்துக்குடி துறைமுகத்தில் விற்பனை ஆகாத மலேசிய மணலால் அரசின் சார்பில் துறைமுகத்துக்கு 70 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மணல் குவாரிகள் அமைக்க நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதனால் கட்டுமான பணிகளுக்கான மணல் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. இதற்காக அந்த நிறுவனம் 7 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 813 மதிப்புள்ள மணலுக்கு, 2.88 கோடி சுங்கவரி, 38.40 லட்சம் ஜி.எஸ்.டி. வரியுயும் செலுத்தி இருந்தது. தொடர்ந்து இந்த மணலை கட்டுமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது.
 
 

’பேசாம பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்’ - மலேசிய மணலால் தமிழக அரசுக்கு வந்த வினை...!
 
ஆனால், தமிழக அரசு சார்பில் தனியார் நேரடியாக மணல் விற்பனை செய்ய தடை விதித்தது. அது மட்டுமின்றி மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று அரசாணையை வெளியிட்டது. இதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த மணலுக்காக 12 கோடியை தனியார் நிறுவனத்துக்கு கோர்ட்டு மூலம் வழங்கியது. இதனை தொடர்ந்து அரசே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
 
’பேசாம பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்’ - மலேசிய மணலால் தமிழக அரசுக்கு வந்த வினை...!
 
அதன்படி தமிழக அரசு, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்கான முன்பதிவு 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி மாலை 4 மணி முதல் தொடங்கப்பட்டது. இந்த மணலுக்காக, TNsand இணையதளத்திலும், செல்போன் செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். துறைமுகத்தில் முதல்கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து மணல் வழங்கப்படும். TNsand இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 டன்) மணல் விலை 9,990 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், 2 யூனிட் மணலின் விலை 19,980 ரூபாயாகவும், 3 யூனிட் மணலின் விலை 29,970 ரூபாயாகவும் 4 யூனிட் மணலின் விலை 39,960 ரூபாயாகவும் 5 யூனிட் மணலின் விலை 49,950 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 
 

’பேசாம பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்’ - மலேசிய மணலால் தமிழக அரசுக்கு வந்த வினை...!
 
 
மலேசிய மணலுக்கு மவுசு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலர் இந்த மணலை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. மணலுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எம்.சாண்ட் விற்பனையும் அதிகரிக்கப்பட்டது. அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் எம்.சாண்ட் கொண்டு கட்டப்பட்டன. இதனால் இறக்குமதி செய்யப்பட்ட மலேசியா மணலின் மீது இருந்த பில்டர்ஸ் பார்வை எம்.சாண்ட் பக்கம் திரும்பியது. இதனால் மலேசியா மணல் பாராமுகமாகி விட்டது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே  மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ள மணல் விற்பனையாகாமல் தேங்கி உள்ளது. செடி, கொடிகளால் சூழப்பட்டு கிடக்கிறது.  
 
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மணல் வைக்கப்பட்டதால் அதற்கு அரசு சார்பில் 70 லட்சம் துறைமுகத்துக்கு வாடகை கட்டணம் தர வேண்டியுள்ளது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியின் தவறான முடிவால் மணல் விற்பனை ஆகாத நிலையிலும், வாடகை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய அரசு மலேசிய மணலை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget