மேலும் அறிய

கரூர்: அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

அமராவதி அணையிலிருந்து புதிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு.

அமராவதி அணையிலிருந்து புதிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்கால்களில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்ட தண்ணீர் காலை முதல் வினாடிக்கு 440 கன அடி வரை திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 69. 26 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு 116 கன அடி தண்ணீர் வந்தது. 

 

கரூர்: அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

 

மாயனூர் கதவணை.

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு 20.50 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. குடிநீர் தேவைக்காக அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது. நான்கு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஆத்துப்பாளையம் அணை.

கரூர் மாவட்டம் கா பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 24 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 15.35 கன அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

 

கரூர்: அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

 

குறைந்து வரும் நிலத்தடி நீர்.

க.பரமத்தி வட்டாரத்தில் போதிய மழை இல்லாததால் குறைந்து வரும் நிலத்தடி நீர் க.பரமத்தி வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பருவ மழை பெய்ய தவறி விட்டதால் கடந்த மாதங்களாக குடிநீர் ஆதாரம் குறைந்துவிட்டது. இதனால் தானிய பயிர்கள், பணப்பயிர்கள் விளைவிக்க முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். கிணற்று பாசனம் முற்றிலும் பொய்த்து விட்டதால் தென்னை மரங்கள் 50 சதவீதத்திற்கும் மேல் காய்ந்து விட்டது. போதிய தண்ணீர் கிடைக்காததால் கால்நடைகளும் விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்று விட்டனர். காய்கறிகள் தற்போது விவசாய குடும்பங்கள் வாங்கி வருகின்றனர். கடந்த சில தினங்களாக காற்று பலமாக வீசி வருவதால் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து வருகிறது. 

 

கரூர்: அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

 

காவிரி ஆற்றின் மூலம் பல கிராமங்களில் சப்ளை செய்யப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை. இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் கிடைத்து வந்தனர். தற்போது அது போதுமான அளவு கிடைப்பதில்லை. தண்ணீர் நாளுக்கு நாள் மட்டும் வெகுவாக குறைந்து வருகிறது. வறட்சிக்கு இலக்கான பகுதியாக இருப்பதால் விவசாயிகள் தற்போது கிராமத்தை விட்டு நகர பகுதிக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

ரயில்வே குகை வழிபாதையில் தேங்கும் நீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி.

கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே குகை வழிப்பாதையில்  ஊற்று நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாடு முழுதும் ரயில்வே கேடுகளை, நிரந்தரமாக மூடவும், விபத்துகளை தவிர்க்கவும், அதிகப்படியான வாகனங்கள் செல்லும் ரயில்வே கேட்பகுதியில், குகை வழிப்பாதை  அல்லது மேம்பாலம் கட்டும் நடவடிக்கையில், இந்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில் கரூர் தொழிற்பேட்டை- சனப்பிரட்டி  இடையே குகை வழிப்பாதை சமீபத்தில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு 20 அடி பள்ளத்தில் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 24 மணி நேரமும் உற்று நீர் வெளியேறி, குகை வழிப்பாதையில் தேங்கியுள்ளது.

இதனால், அந்த வழியாக, சனப்பிரட்டி உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள ஊற்று நீரை, மின்மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குகை வழிப் பாதையில், இரண்டு பக்கமும் மின்விளக்குகள் சரிவர எறிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் இந்த வழியே செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். சுவரில் ஆங்காங்கே சிமெண்ட் பூச்சுகள் உதிர தொடங்கியுள்ளன. எனவே, கரூர் தொழிற்பேட்டை – சனப்பிரட்டி இடையே உள்ள, ரயில்வே குகை வழிப்பாதையில் உள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
Pawan Kalyan: “தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள்“.. விளாசிய பவன் கல்யாண்.. எதற்கு தெரியுமா.?
“தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள்“.. விளாசிய பவன் கல்யாண்.. எதற்கு தெரியுமா.?
TN Global City: 2000 ஏக்கர் புதிய நகரம்..! எங்கே அமைகிறது? எகிறும் நிலங்களின் விலை, பரந்தூருக்கு ஜாக்பாட்? உட்கட்டமைப்பு விவரங்கள்
TN Global City: 2000 ஏக்கர் புதிய நகரம்..! எங்கே அமைகிறது? எகிறும் நிலங்களின் விலை, பரந்தூருக்கு ஜாக்பாட்? உட்கட்டமைப்பு விவரங்கள்
IPL 2025 CSK: சிஎஸ்கே மேட்ச்சை பாக்க பஸ்ல ஃப்ரீயா போகனுமா? இது மட்டும் இருந்தாலே போதும்!
IPL 2025 CSK: சிஎஸ்கே மேட்ச்சை பாக்க பஸ்ல ஃப்ரீயா போகனுமா? இது மட்டும் இருந்தாலே போதும்!
Embed widget