
Kallakurichi Illicit Liquor Death: இரத்தத்தில் கலந்த மெத்தனால்.... ஜிப்மரில் 4 பேர் கவலைக்கிடம்
Kallakurchi illicit liquor: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி ஜிப்மரில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 17ஆக உயர்வு. இதில் நான்கு பேர் கவலைக்கிடம்.

Kallakurchi illicit liquor: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி ஜிப்மரில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 17ஆக உயர்வு. இதில் நான்கு பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிப்மரில் 4 பேர் கவலைக்கிடம்
அதிகரிக்கும் உயிரிழப்புகள்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் சுமார் 10 பேர் வரை உயிரிழந்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளில் கிடுகிடுவென உயர்ந்த பலியானவர்களின் எண்ணிக்கை 40-ஐ கடந்தது. மூன்றவாது நாளான நேற்றைய நாளின் முடிவில் 52 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, மொத்த பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
தீவிர சிகிச்சை:
இதனிடையே, கள்ளச்சாராயம் அருந்திய சிலருக்கு கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மெத்தனால் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் கையிருப்பில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தர். ஆனால், அதனை மக்கள் நல்வாழ்வு அமைச்சர் திட்டவட்டமாக மறுத்து, தவறான தகவல்களை ஈபிஎஸ் பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரார மரணங்களை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

