![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Online Rummy: இந்த முறை மிஸ் ஆகாது! ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. இன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு?
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதோ நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Online Rummy: இந்த முறை மிஸ் ஆகாது! ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. இன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு? It has been reported that prohibition bill online gambling ban was tabled again yesterday and is being sent to the governor today. Online Rummy: இந்த முறை மிஸ் ஆகாது! ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. இன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/24/fd88a05e79f2b9dbe4c953c9d419a3b21679638046422589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதோ நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தமிழ்நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஒரு மனதாக தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 மாதம் வரை ஒப்புதல் அளிக்காமல் கடந்த 6ஆம் தேதி தமிழ்நாடு அரசு போதிய விளக்கம் அளிக்கவில்லை என கூறி திருப்பி அனுப்பி வைத்தார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு நிதிநிலை பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் முக்கியமாக தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 21ஆம் தேதி வேளாண் துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
22ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபை நடைபெறவில்லை. நேற்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. முதலில் சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதன் பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் இதுவரை 41 பேர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் உயிரிழந்துள்ளதாகவும், இந்த சட்ட மசோதா அறிவால் அல்ல உள்ளத்தால் நிறைவேற்றப்படுகிறது என கூறினார்.
ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவை தாக்கல் செயத் பின் எதிர்க்கட்சியினர் அதன் மீதான கருத்துக்களை தெரிவித்தனர். இந்த சட்ட மசோதாவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம், செல்வப்பெருந்தகை, ஜி.கே மணி என அனைவரும் கருத்து தெரிவித்து பேசினர். பின் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா இன்று ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவை அலுவலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பிய நிலையில் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இன்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க உள்ள நிலையில் நேற்றைய தினம் அவர் டெல்லிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)