மேலும் அறிய

மேட்டூர் அணையில் நீருக்கு நடுவே சிக்கித் தவித்த நாய்.. ட்ரோன் மூலம் சேர்க்கப்பட்ட பிரியாணி

நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், இதுவரை மேட்டூரில் தண்ணீருக்கு இடையே சிக்கித் தவிக்கும் நாயை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மேட்டூரில் இருந்து உபரிநீர் திறக்கும் பகுதியில் சிக்கிக்கொண்ட நாயை மீட்கும் பணி ஆறாவது நாளாக நடைபெற்று வருகிறது. 

தண்ணீரில் சிக்கிய நாய்:

மேட்டூர் அணை கடந்த 30 ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் அழைத்து வரும் நீர் முழுவதுமாக மேட்டூர் அணை உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அப்போது முதல் கட்டமாக ஒரு லட்சம் கன அடி நீர் உபரி நீராக திறக்கப்பட்டது. இந்த நிலையில், உபரி நீர் செல்லும் 16 கண் மதகு அருகே உள்ள சிறிய மண் திட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. இரண்டு நாட்களுக்கு பின்னர் பொதுமக்கள் கண்டுபிடித்து தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். 

மேட்டூர் அணையில் நீருக்கு நடுவே சிக்கித் தவித்த நாய்.. ட்ரோன் மூலம் சேர்க்கப்பட்ட பிரியாணி

ட்ரோன் மூலம் உணவு:

புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில், உடனடியாக சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பெயரில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உடனடியாக நாய்க்கு உணவு அளிக்க உத்தரவிட்டார். அதன்படி தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மூலம் நாய்க்கு பிரியாணி, பிஸ்கட், இறைச்சிகளை உணவாக வழங்கினர். தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருந்ததால் நாயை நீக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆறாவது நாளாக இன்றும் நாயை மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து தோல்வியடைந்தனர். இருப்பினும் நாய்க்கு தேவையான உணவுகள் ட்ரோன் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. நாய்க்கு தீயணைப்பு வீரர்கள் வழங்கப்படும் உணவுகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் சிலரும் ட்ரோன் மூலம் நாய்க்கு தங்களால் முடிந்த உணவை வழங்கி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் நாயை மீட்கும் பணியில் பலமுறை ஈடுபட்ட போதும், நீர்வரத்து வேகமாக இருப்பதால் நாயை மீட்க முடியாமல் திரும்பினர். 

மேட்டூர் அணையில் நீருக்கு நடுவே சிக்கித் தவித்த நாய்.. ட்ரோன் மூலம் சேர்க்கப்பட்ட பிரியாணி

உயர்நீதிமன்றத்தில் வழக்கு:

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேட்டூர் அணையில் தண்ணீருக்கு நடுவே சிக்கித் தவிக்கும் நாயை மீட்க உத்தரவிட கோரி அவசர பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேசிய பேரிடர் மீட்பு குழு நாயை மீட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது அரசு தரப்பில், நீர் படிப்படியாக குறைந்து வருகிறது. நாய்க்கு ட்ரோன் மூலம் உரிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்க தேவையில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

நாயை மீட்க கோரிக்கை:

நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், இதுவரை மேட்டூரில் தண்ணீருக்கு இடையே சிக்கித் தவிக்கும் நாயை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேட்டூர் அணையின் நீர் படிப்படியாக குறைந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் நாய் மீட்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாய்க்கு ட்ரோன் மூலம் உணவு வழங்குவதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இருப்பினும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் உடனடியாக மேட்டூரில் சிக்கியுள்ள நாயை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget