மேலும் அறிய

மேட்டூர் அணையில் நீருக்கு நடுவே சிக்கித் தவித்த நாய்.. ட்ரோன் மூலம் சேர்க்கப்பட்ட பிரியாணி

நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், இதுவரை மேட்டூரில் தண்ணீருக்கு இடையே சிக்கித் தவிக்கும் நாயை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மேட்டூரில் இருந்து உபரிநீர் திறக்கும் பகுதியில் சிக்கிக்கொண்ட நாயை மீட்கும் பணி ஆறாவது நாளாக நடைபெற்று வருகிறது. 

தண்ணீரில் சிக்கிய நாய்:

மேட்டூர் அணை கடந்த 30 ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் அழைத்து வரும் நீர் முழுவதுமாக மேட்டூர் அணை உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அப்போது முதல் கட்டமாக ஒரு லட்சம் கன அடி நீர் உபரி நீராக திறக்கப்பட்டது. இந்த நிலையில், உபரி நீர் செல்லும் 16 கண் மதகு அருகே உள்ள சிறிய மண் திட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. இரண்டு நாட்களுக்கு பின்னர் பொதுமக்கள் கண்டுபிடித்து தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். 

மேட்டூர் அணையில் நீருக்கு நடுவே சிக்கித் தவித்த நாய்.. ட்ரோன் மூலம் சேர்க்கப்பட்ட பிரியாணி

ட்ரோன் மூலம் உணவு:

புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில், உடனடியாக சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பெயரில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உடனடியாக நாய்க்கு உணவு அளிக்க உத்தரவிட்டார். அதன்படி தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மூலம் நாய்க்கு பிரியாணி, பிஸ்கட், இறைச்சிகளை உணவாக வழங்கினர். தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருந்ததால் நாயை நீக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆறாவது நாளாக இன்றும் நாயை மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து தோல்வியடைந்தனர். இருப்பினும் நாய்க்கு தேவையான உணவுகள் ட்ரோன் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. நாய்க்கு தீயணைப்பு வீரர்கள் வழங்கப்படும் உணவுகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் சிலரும் ட்ரோன் மூலம் நாய்க்கு தங்களால் முடிந்த உணவை வழங்கி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் நாயை மீட்கும் பணியில் பலமுறை ஈடுபட்ட போதும், நீர்வரத்து வேகமாக இருப்பதால் நாயை மீட்க முடியாமல் திரும்பினர். 

மேட்டூர் அணையில் நீருக்கு நடுவே சிக்கித் தவித்த நாய்.. ட்ரோன் மூலம் சேர்க்கப்பட்ட பிரியாணி

உயர்நீதிமன்றத்தில் வழக்கு:

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேட்டூர் அணையில் தண்ணீருக்கு நடுவே சிக்கித் தவிக்கும் நாயை மீட்க உத்தரவிட கோரி அவசர பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேசிய பேரிடர் மீட்பு குழு நாயை மீட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது அரசு தரப்பில், நீர் படிப்படியாக குறைந்து வருகிறது. நாய்க்கு ட்ரோன் மூலம் உரிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்க தேவையில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

நாயை மீட்க கோரிக்கை:

நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், இதுவரை மேட்டூரில் தண்ணீருக்கு இடையே சிக்கித் தவிக்கும் நாயை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேட்டூர் அணையின் நீர் படிப்படியாக குறைந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் நாய் மீட்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாய்க்கு ட்ரோன் மூலம் உணவு வழங்குவதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இருப்பினும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் உடனடியாக மேட்டூரில் சிக்கியுள்ள நாயை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
Ramadoss Vs Anbumani: “அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
“அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
Ramadoss Vs Anbumani: “அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
“அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
CUET UG Result 2025: நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
CUET UG Result 2025: நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
PM Modi: சீனா போட்ட கணக்கு, டக்குன்னு இந்தியா செஞ்ச டீல் - இனி EV உற்பத்திக்கு நோ ப்ராப்ளம், மோடி ட்ரிப்..
PM Modi: சீனா போட்ட கணக்கு, டக்குன்னு இந்தியா செஞ்ச டீல் - இனி EV உற்பத்திக்கு நோ ப்ராப்ளம், மோடி ட்ரிப்..
Mumbai IIT: ஆமா, 11th ஃபெயிலு.. விடாமுயற்சியால் ஐஐடியில் இடம், பானி பூரி விற்பவரின் மகன் சாதித்தது எப்படி?
Mumbai IIT: ஆமா, 11th ஃபெயிலு.. விடாமுயற்சியால் ஐஐடியில் இடம், பானி பூரி விற்பவரின் மகன் சாதித்தது எப்படி?
Mileage Bikes: தினமும் வண்டியும் ஓட்டணும், பெட்ரோலுக்கு அதிகம் செலவும் ஆகக்கூடாதா? மைலேஜில் அசத்தும் பைக்குகள்
Mileage Bikes: தினமும் வண்டியும் ஓட்டணும், பெட்ரோலுக்கு அதிகம் செலவும் ஆகக்கூடாதா? மைலேஜில் அசத்தும் பைக்குகள்
Embed widget