மேலும் அறிய

விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி நடந்த மீன்பிடி திருவிழா...!- போலீஸ் வந்ததால் சிதறி ஓடிய கிராம மக்கள்

ஏரிக்குள் இறங்கி கெண்டை, ஜிலேபி, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்த போது போலீஸ் வந்ததால் பிடித்த மீன்களுடன் கிராம மக்கள் தெறித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கூடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் அருகே ஏரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற மக்களை போலீசார் விரட்டியடித்தனர். விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் 200 ஏக்கர் அளவில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் தற்போது 50 ஏக்கர் பரப்பளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரி தண்ணீர் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்வதோடு, மீன் குஞ்சுகளும் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் மீன் குத்தகை ஏலம் விடப்படும். தொடர்ந்து, மீன்பிடி திருவிழா நடப்பது வழக்கம்.

 


விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி நடந்த  மீன்பிடி திருவிழா...!- போலீஸ் வந்ததால் சிதறி ஓடிய கிராம மக்கள்

 

இந்த ஏரியில் சில தினங்களுக்கு முன் மீன் குத்தகை ஏலம் முடிந்த நிலையில், மீன்பிடி திருவிழா நடைபெற இருந்தது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நடத்த தடை உள்ளது. இந்த சூழலில், நேற்று தடையை மீறி கல்பட்டு ஏரியை சுற்றியுள்ள கிராம மக்கள், கூடை, வலை, துணிகள் மூலம் மீன்பிடி திருவிழாவை நடத்தினர். கல்பட்டு மட்டுமின்றி, சிறுவாக்கூர், தெளி, நத்தமேடு, ஒட்டன்காடுவெட்டி உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன் பிடித்தனர்.  அதில், கெண்டை, ஜிலேபி, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன்களை மக்கள் ஆர்வத்தோடு பிடித்தனர்.


விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி நடந்த  மீன்பிடி திருவிழா...!- போலீஸ் வந்ததால் சிதறி ஓடிய கிராம மக்கள்

 

இந்நிலையில் ஊரடங்கை மீறி நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழா குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது.

 

தகவலறிந்த காணை போலீசார், கல்பட்டு ஏரிக்கு  விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கிராம மக்கள், தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களுடன் நாலாபுறமும் ஓடினர்.  மேலும் எந்நேரத்திலும் பொதுமக்கள் மீன்பிடிக்க ஏரிக்குள் இறங்கலாம் என கருதி பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்து,  உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவைப் மதிக்காமல் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஏரியில் மீன் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக காணை போலீசார் 300 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Embed widget