Wife Kill Husband: தகாத உறவு - வழிகாட்டிய அம்மா..! கணவனை போட்டு தள்ளிய மனைவி - ஷாக்கான காவல்துறை
Wife Kill Husband: தாயின் உதவியோடு மனைவியே கணவனை கைது செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife Kill Husband: கணவனை கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவனை கொலை செய்த மனைவி
பெங்களூருவில் கடந்த வாரம் 37 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், திருமணத்தை மீறி பல பெண்களுடன் உறவை வைத்திருந்தது மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் காரணமாக அவரது மனைவி மற்றும் மாமியாரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, என்று போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் கைது
சிக்கபனாவராவில் வெறிச்சோடிய பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரில், இறந்த நிலையில் ஒரு உடல் இருப்பதை கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அது லோக்நாத் சிங் எனும் ரியல்-எஸ்டேட் தொழிலதிபர் என்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக பேசிய வடக்கு பெங்களூரு துணை காவல் ஆணையர் (டிசிபி) சைதுல் அதாவத் , "சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 112 என்ற எண்ணில் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடல் குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குற்றத்திற்காக அவரது மனைவி மற்றும் மாமியாரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
நடந்தது என்ன?
குற்றம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உணவில் தூக்க மாத்திரைகளை கலக்கியிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் லோக்நாத்தை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் அவரது தொண்டையை அறுத்துவிட்டு தப்பிச் சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் காரணமாகவும் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ரகசிய திருமணம்:
டிசம்பர் மாதம் குனிகலில் தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, லோக்நாத் தனது மனைவியுடன் இரண்டு வருடங்களாக உறவில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் இருந்ததால் அவரது குடும்பத்தினர் இந்த உறவை எதிர்த்ததால், ரகசிய திருமணம் செய்துள்ளனர். இருவீட்டாருக்கும் திருமணம் குறித்து எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.
அதன்படி திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே, லோக்நாத் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு இவர்களின் திருமணம் பற்றித் தெரியவந்துள்ளது.
கொலைக்கான திட்டம்
இந்த சூழலில் தான் லோக்நாத்தின் மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தினர் அவரது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் பற்றி அறிந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கணவன் மனைவி தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டதாலும், விவாகரத்து பெறுவது குறித்தும் கூட யோசித்ததாலும் உறவு மோசமடைந்தது. லோக்நாத் தனது மாமனார் மற்றும் மாமியாரை மிரட்டத் தொடங்கியதாகவும், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து, லோக்நாத்தை கொல்ல திட்டத்தை வகுத்துள்ளனர். அதன்படி, மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து கொல்லப்பட்ட லோக்நாத், மோசடி வழக்கு தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

