மேலும் அறிய

Wife Kill Husband: தகாத உறவு - வழிகாட்டிய அம்மா..! கணவனை போட்டு தள்ளிய மனைவி - ஷாக்கான காவல்துறை

Wife Kill Husband: தாயின் உதவியோடு மனைவியே கணவனை கைது செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife Kill Husband: கணவனை கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவனை கொலை செய்த மனைவி

பெங்களூருவில் கடந்த வாரம் 37 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், திருமணத்தை மீறி பல பெண்களுடன் உறவை வைத்திருந்தது மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் காரணமாக அவரது மனைவி மற்றும் மாமியாரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றவாளிகள் கைது

சிக்கபனாவராவில் வெறிச்சோடிய பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரில், இறந்த நிலையில் ஒரு உடல் இருப்பதை கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அது லோக்நாத் சிங் எனும் ரியல்-எஸ்டேட் தொழிலதிபர் என்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக பேசிய வடக்கு பெங்களூரு துணை காவல் ஆணையர் (டிசிபி) சைதுல் அதாவத் , "சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 112 என்ற எண்ணில் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடல் குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குற்றத்திற்காக அவரது மனைவி மற்றும் மாமியாரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

நடந்தது என்ன?

குற்றம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உணவில் தூக்க மாத்திரைகளை கலக்கியிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் லோக்நாத்தை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் அவரது தொண்டையை அறுத்துவிட்டு தப்பிச் சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் காரணமாகவும் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

ரகசிய திருமணம்:

டிசம்பர் மாதம் குனிகலில் தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, லோக்நாத் தனது மனைவியுடன் இரண்டு வருடங்களாக உறவில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் இருந்ததால் அவரது குடும்பத்தினர் இந்த உறவை எதிர்த்ததால், ரகசிய திருமணம் செய்துள்ளனர். இருவீட்டாருக்கும் திருமணம் குறித்து எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.

அதன்படி திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே, லோக்நாத் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு இவர்களின் திருமணம் பற்றித் தெரியவந்துள்ளது.

கொலைக்கான திட்டம்

இந்த சூழலில் தான் லோக்நாத்தின் மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தினர் அவரது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் பற்றி அறிந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 

கணவன் மனைவி தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டதாலும், விவாகரத்து பெறுவது குறித்தும் கூட யோசித்ததாலும் உறவு மோசமடைந்தது. லோக்நாத் தனது மாமனார் மற்றும் மாமியாரை மிரட்டத் தொடங்கியதாகவும், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து, லோக்நாத்தை கொல்ல திட்டத்தை வகுத்துள்ளனர். அதன்படி, மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து கொல்லப்பட்ட லோக்நாத்,  மோசடி வழக்கு தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவின் கண்காணிப்பில்  இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
மயிலாடுதுறையில் இத்தனை பேரிடம் துப்பாக்கியா...! என்னங்க சொல்றீங்க..?
மயிலாடுதுறையில் இத்தனை பேரிடம் துப்பாக்கியா...! என்னங்க சொல்றீங்க..?
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget