மேலும் அறிய

Crime: மூதாட்டி கழுத்து அறுத்து கொலை; நகை, பணம் கொள்ளை - சேலத்தில் பரபரப்பு

பணத்திற்காக மகன் கொலை செய்தாரா? கொலைக்கான காரணம் குறித்து 2 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் ஏழுபரணை காட்டை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. இவரது மனைவி அத்தாயம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கொளத்தூரில் வசித்து வருகின்றனர். நேற்றி இரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் அத்தாயம்மாள் உறங்கிக் கொண்டிருந்தார். ராமசாமி அருகில் உள்ள கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை ராமசாமி எழுந்து வந்து அத்தாயம்மாளை பார்க்கும் போது, கட்டிலில் படுத்த நிலையில் கல்லால் தாக்கி, கழுத்தை அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து, ராமசாமி மகள் மல்லிகாவிற்கு தகவல் கொடுத்தார். பின்னர், கொலை சம்பவம் குறித்து கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அத்தாயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகை, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 

Crime: மூதாட்டி கழுத்து அறுத்து கொலை; நகை, பணம் கொள்ளை - சேலத்தில் பரபரப்பு

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் கொளத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தடயவியல் அறிவியல் நிபுணர்கள் வீடு முழுவதும் ஆய்வு செய்து, கை ரேகைகளை கைப்பற்றினர். பின்னர், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மோப்பநாய் வீட்டில் இருந்து மேற்கு பக்கம் நோக்கி சுமார் 400 மீட்டர் சென்ற நிலையில் திரும்பி வீட்டிற்கு வந்தது. தொடர்ந்து, மேற்கு மண்டல ஐஜி பவானி ஈஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், மேற்கு மண்டல ஐஜியின் அதிவிரைவுப் படை காவலர்கள் வனப்பகுதிகளில் கொலைக்கான ஆயுதங்கள் உள்ளதா? என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Crime: மூதாட்டி கழுத்து அறுத்து கொலை; நகை, பணம் கொள்ளை - சேலத்தில் பரபரப்பு

இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கொளத்தூர், மேட்டூர், கருமலைக்கூடல், மேச்சேரி உள்ளிட்ட சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் தீவிர வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி ஈரோடு மாவட்டத்தின் ஒட்டி உள்ளதால், ஈரோடு காவல்துறையினரும் மாவட்ட எல்லை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலையான அத்தாயம்மாள் மகன் பிரகாஷ்க்கு 2 மனைவிகள் இருக்கின்றனர். முதல் மனைவி கவிதா  திருச்செங்கோட்டில் வசித்து வருகிறார். இதனிடையே பிரகாஷ் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த தங்கமணி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, 2வது மனைவி தங்கமணியும், பிரகாஷும் சொத்துக்களை விற்று பணம் தர வேண்டும் என அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்று பணம் கொடுத்துள்ளனர். இதனால் காவல்துறையினருக்கு பிரகாஷ், தங்கமணி ஆகியோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN weather Report: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
TN weather Report: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
IND vs ENG: டி20 மோடில் ஓவல் டெஸ்ட்... 35 ரன்களா? 3 விக்கெட்டா? இங்கிலாந்து - இந்தியா வெற்றிக்கு மல்லுகட்டு
IND vs ENG: டி20 மோடில் ஓவல் டெஸ்ட்... 35 ரன்களா? 3 விக்கெட்டா? இங்கிலாந்து - இந்தியா வெற்றிக்கு மல்லுகட்டு
Dhanush: ”என் படம் எனக்கே பிடிக்கலை.. நான் இதுக்காக கையெழுத்து போடல” - தனுஷ் ஆதங்கம், என்ன ஆச்சு?
Dhanush: ”என் படம் எனக்கே பிடிக்கலை.. நான் இதுக்காக கையெழுத்து போடல” - தனுஷ் ஆதங்கம், என்ன ஆச்சு?
Longest Range EVs: அடிக்கடி சார்ஜ் போடனும்னு பயம் வேண்டாம் - நாட்டிலேயே அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார கார்கள்
Longest Range EVs: அடிக்கடி சார்ஜ் போடனும்னு பயம் வேண்டாம் - நாட்டிலேயே அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார கார்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Report: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
TN weather Report: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
IND vs ENG: டி20 மோடில் ஓவல் டெஸ்ட்... 35 ரன்களா? 3 விக்கெட்டா? இங்கிலாந்து - இந்தியா வெற்றிக்கு மல்லுகட்டு
IND vs ENG: டி20 மோடில் ஓவல் டெஸ்ட்... 35 ரன்களா? 3 விக்கெட்டா? இங்கிலாந்து - இந்தியா வெற்றிக்கு மல்லுகட்டு
Dhanush: ”என் படம் எனக்கே பிடிக்கலை.. நான் இதுக்காக கையெழுத்து போடல” - தனுஷ் ஆதங்கம், என்ன ஆச்சு?
Dhanush: ”என் படம் எனக்கே பிடிக்கலை.. நான் இதுக்காக கையெழுத்து போடல” - தனுஷ் ஆதங்கம், என்ன ஆச்சு?
Longest Range EVs: அடிக்கடி சார்ஜ் போடனும்னு பயம் வேண்டாம் - நாட்டிலேயே அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார கார்கள்
Longest Range EVs: அடிக்கடி சார்ஜ் போடனும்னு பயம் வேண்டாம் - நாட்டிலேயே அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார கார்கள்
IND vs ENG: இது டெஸ்டா? டி20யா? ஒரே தொடரில் 7 ஆயிரம் ரன்கள்.. மலை போல ரன்களை குவித்த இந்தியா - இங்கிலாந்து!
IND vs ENG: இது டெஸ்டா? டி20யா? ஒரே தொடரில் 7 ஆயிரம் ரன்கள்.. மலை போல ரன்களை குவித்த இந்தியா - இங்கிலாந்து!
கூட்டணிக்கு இவர்கள் வந்தால் மகிழ்ச்சி தான்.. முடிவு முதல்வர் கையில் தான்..  திருமாவளவன் பேச்சு
கூட்டணிக்கு இவர்கள் வந்தால் மகிழ்ச்சி தான்.. முடிவு முதல்வர் கையில் தான்.. திருமாவளவன் பேச்சு
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
Embed widget