மேலும் அறிய
தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் பட்டுக்கூடு வரத்து மடங்கு அதிகரிப்பு
தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் பட்டுக்கூடு வரத்து ஒரு மடங்கு அதிகரித்து, ரூ.15.25 இலட்சத்திற்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.31 இலட்சத்திற்கு ஏலம்.

தருமபுரியில் பட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர். தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.7 இலட்சத்திற்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில், பட்டுக்கூடுகள் வரத்து அதகரித்து 27 விவசாயிகள் கொண்டு வந்த 2266 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.15.25 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு பட்டுக்கூடுகள் வரத்து ஒரு மடங்கு அதிகரித்தது. இந்த ஏலத்தில் 68 விவசாயிகள் கொண்டு வந்து 4875 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.31 இலட்சத்திற்கு விற்பனையானது. இதில் குறைந்தபட்சம் ரூ.405 க்கும், அதிகபட்சமாக ரூ.759-க்கும், சராசரியாக 635 ரூபாய் என ஏலம் போனது. மேலும் நேற்று முன்தினம் பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 2266 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.15.25 இலட்சத்திற்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று ஒரு மடங்கு வரத்து அதிகரித்து, ரூ.31 இலட்சத்திற்கு விற்பனையானது. மேலும் பட்டுக்கூடுள் வரத்தும், விலையும் அதிகரித்ததால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக குறைந்தது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் தமிழக எல்லையன பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து தொடர்ந்து ஒரு வாரமாக சரிந்து வருகிறது. இன்று காலை வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக குறைந்தது.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து ஒரே சீராக இருப்பதால், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தொடர்ந்து நீர்வரத்து குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion