மேலும் அறிய

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

2025ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், யார் அந்த சார்? என்ற வாசகம் பொறித்த சட்டையுடன் அ.தி.மு.க.வினர் இன்று அவைக்கு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Assembly: 2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர். 

யார் அந்த சார்?

சட்டமன்றத்திற்கு வந்திருந்த எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் அணிந்திருந்த சட்டையில் யார் அந்த சார்? என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் உள்ளேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியை ஞானசேகரன் சாரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியதாகவும், அப்போது ஞானசேகரனுக்கு வந்த அழைப்பில் ஞானசேகரன் சார்? சார்? என்று கூறியதாகவும் போலீசாரிடம் மாணவி விசாரணையில் கூறியதாக தகவல் வெளியாகியது. 

சட்டையிலும் எதிர்ப்பு:

இந்த விவகாரத்தில் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஆளுங்கட்சியான தி.மு.க. தங்களுக்கு நெருக்கமான அந்த சாரை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அ.தி.மு.க. தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. 

இந்த பரபரப்பான சூழலிலே, இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்திற்கு யார் அந்த சார்? என்ற வாசகம் பொறித்த சட்டையுடன் அ.தி.மு.க.வினர் அவைக்கு வந்தனர். சட்டமன்றத்தில் யார் அந்த சார்? என்ற பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்று காலையில் அ.தி.மு.க.வினர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடத்த இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், தி.மு.க.விற்கு எதிராக தீவிரமாக செயல்பட அ.தி.மு.க. வியூகம் வகுத்துள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் வழக்கத்தை விட கடும் போட்டி எழும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. 

இபிஎஸ்-க்கு பெரும் சவால்?

ஆளுங்கட்சியான தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்துள்ள நிலையில், அ.தி.மு.க. தங்களுக்கு சரிந்துள்ள மக்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள அடுத்த ஒரு வருடம் தீவிரமாக போராட்டம், தி.மு.க. எதிர்ப்பை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்ற பிறகு அ.தி.மு.க. சந்தித்த எந்த தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி கிடைக்காத சூழலில், அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைக்கும் மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், கட்சியை வலுப்படுத்துதல், மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை மீண்டும் உயர்த்துதல், தென் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை மீண்டும் அதிகரித்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடவும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்த ஒரு வருடத்திற்கு இப்படித்தான்:

தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபமெடுத்துள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற விவகாரத்தில் தி.மு.க.விற்கு எதிரான விமர்சனத்தை வலுவாக மக்களிடம் கொண்டு செல்ல அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. 

அடுத்த ஒரு வருடத்திற்கு இதுபோன்று அடிக்கடி பல்வேறு நடவடிக்கைகளையும், வியூகங்களையும் கையில் எடுக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாகவே சட்டசபைக் கூட்டத்திற்கு யார் அந்த சார்? என்ற வாசகத்துடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்ததை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget