மேலும் அறிய

Crime: கஞ்சா கடத்திய வழக்கில் அஜித், விஜய் கைது! மதுரை மத்திய சிறையில் அடைப்பு - சிக்கியது எப்படி?

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சில்லறை விற்பனைக்காக கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த நபர்களை காவல்துறை மடக்கியது.

காவல்துறை நடவடிக்கைகள்:

தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மூலைகளுக்கும்  கஞ்சா கடத்தப்பட்டுவருவதாக மதுரை மாநகர மத்திய புலனாய்வு பிரிவு (CIU) காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பெயரில் கஞ்சா கடத்தல் குறித்து  மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை வைகையாற்று கரையோரம் புட்டுத்தோப்பு பகுதியில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி அதில் சோதனையிட்டபோது காருக்குள் 20 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருப்பது தெரியவந்துள்ளது. 

கஞ்சா கடத்தல்:

இதனையடுத்து காரில் வந்த மதுரை சூர்யாநகரை சேர்ந்த அஜித்குமார் (28) அவரின் ஆக்டிங் டிரைவர்களாக அழைத்துவந்த மதுரை உத்தங்குடியை சேர்ந்த விஜய், புதூர் லூர்து நகர் பகுதியை சேர்ந்த விவேகானந்தன் ஆகிய மூவரையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா கடத்தலில் சிக்கிய அஜித்குமாரிடம் நடத்திய விசாரணையின் போது மதுரையின் பிரபல ரவுடியான லோடு முருகனின் நண்பரான சதாம் உசேன் என்பவர் மூலமாக ஆந்திர மாநிலம் விஜயவாடா, பத்ராசலம் என்ற ஊரில் உள்ள கணேசன் என்பவரிடம்  மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு சென்று  11 லட்சம் கொடுத்து 20 கிலோ கஞ்சாவை கடத்திவந்துள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும் கடத்தப்பட்ட  20 கிலோ கஞ்சாவை சென்னையிலுள்ள சில்லரை வியாபாரிகளுக்கும்,  மதுரையில் உள்ள புவனேந்திரன் என்பவருக்கும் சில்லறை விற்பனைக்காகவும்  கொடுத்துவிட்டு அஜித்தும் சில்லறைக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. 

மாநகர் காவல் ஆணையர் பாராட்டு: 

இதனையடுத்து ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த மதுரையை சேர்ந்த அஜித்குமார் , விஜய், விவேகானந்தன் உள்ளிட்டோரிடமிருந்து  கைப்பற்றப்பட்ட 20 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஆகியவற்றை  மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர. இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடமும் கூடுதல் விசாரணை நடத்திய பின்னர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்திலில் ஈடுபட்ட மூவருடன் தொடர்புடைய சில்லறை வியாபாரிகளான புவனேந்திரன் மற்றும் 20 கிலோ கஞ்சாவை விற்பனை செய்த ஆந்திராவை சேர்ந்த கணேசன் அதற்கு உதவியாக இருந்த பிரபல ரவுடி லோடு முருகன் மற்றும் அவரின் நண்பன் சதாம் உசேன் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சில்லறை விற்பனைக்காக கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட மதுரை மாநகர மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினருக்கு மாநகர்காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டுகளை தெரிவித்தார்.

- Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் கம்பீர் தான்; அடித்துச் சொல்லும் பிசிசிஐ வட்டாரங்கள்

தலைப்பு செய்திகள்

ஒரே அறுவை சிகிச்சையில் புதிய காது: மைக்ரோடியா சிறுவனின் வாழ்வில் மருத்துவனை ஒளி !
ஒரே அறுவை சிகிச்சையில் புதிய காது: மைக்ரோடியா சிறுவனின் வாழ்வில் மருத்துவனை ஒளி !
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !
தமிழக அரசியலில் எம்.எல்.ஏ இடப்பெயர்ச்சி: ஜனநாயகமா, ஆள் பிடிக்கும் அரசியலா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி !
தமிழக அரசியலில் எம்.எல்.ஏ இடப்பெயர்ச்சி: ஜனநாயகமா, ஆள் பிடிக்கும் அரசியலா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி !
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
C. Vijayabasker : ’இது ட்ரெய்லர்தான்’ இணைப்பு விழாவில் மாஸாக பேசிய சி.விஜயபாஸ்கர்..!
’இது ட்ரெய்லர்தான்’ சி.விஜயபாஸ்கர் மாஸ் பேச்சு..!
EV Two Wheeler Sales: எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
JanaNayagan Censor: மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?
TN RAIN ALERT: இடி, மின்னலோடு மழை வெளுக்கப்போகுது.! அலர்ட் விடுத்த வானிலை மையம்- எந்த எந்த மாவட்டங்கள்.?
இடி, மின்னலோடு மழை வெளுக்கப்போகுது.! அலர்ட் விடுத்த வானிலை மையம்- எந்த எந்த மாவட்டங்கள்.?
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Embed widget