மேலும் அறிய
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Mar. 5th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு மகிழ்ச்சி இல்லையென்றாலும் கூட்டணிக்காக தியாகம் செய்வதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
- மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோரும், அதிமுக சார்பில் தம்பிதுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். பாமக சார்பில் அன்புமணியும், தேமுதிக சார்பில் சுதிஷூம் போட்டியிடுகிறார்கள்.
- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை குறைவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- சென்னை பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கார்க் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு. முதலில் ட்ராலியில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது; பிற்பகலில் அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது.
- மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் வெளியான நிலையில், வெற்றி பெற்றால், பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலக உள்ளதாக வெளியான தகவலால் அவரது இல்லம் முன்பு JDU கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
- நேபாளத்தில், போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இது, வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது.
- அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராணுவ தளங்களை தர மறுத்த நிலையில் ஸ்பெயின் உடனான வர்த்தக உறவு துண்டிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
- நடப்பு போரில் முதல் முறையாக கொத்து குண்டு பாலிஸ்டிக் ஏவிகணையை வீசி ஈரான் தாக்கியதால் இஸ்ரேல் அதிர்ச்சி அடைந்துள்ளது.
- டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















