மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
சிவகங்கை: இடைக்காட்டூரில் அரிவாள் வெறி! பட்டியலின கிராமத்தில் புகுந்த கும்பல் நடத்திய கொடூர தாக்குதல்! அதிர்ச்சி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் பட்டியலின கிராமத்துக்குள் புகுந்த 9 பேர் அடங்கிய கும்பல், பலரையும் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 பைக்குகளில் வந்த கும்பல், புகார் அளித்த நபரைக் கொல்லும் நோக்கில் தாக்குதல் நடத்தியது.
நாங்குநேரியில் கஞ்சா போதையால் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சூடு தணியும் முன்னரே, சிவகங்கை மாவட்டத்தில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.
வெளியான சிசிடிவி காட்சிகள்
இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
மானாமதுரையை அடுத்துள்ள இடைக்காட்டூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த ராஜூ என்பவர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தபோது, அந்த வழியாக சென்ற மற்றொரு நபருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஏற்பட்ட தகராறில் ராஜூ மீது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து தப்பித்து தனது வீட்டிற்கு சென்ற ராஜுவை தொடர்ந்து சிலர் இருசக்கர வாகனங்களில் அந்த தெருவிற்குள் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு இருந்த சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற நேரத்தில் பதிவானதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விசாரணை
இது குறித்து மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா கூறும்போது, ’’மது போதையில் இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு பின்னர் தாக்குதலாக மாறியதாகவும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’’ என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்























