மேலும் அறிய

துவங்கவுள்ள பருவமழை... தயார் நிலையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம்

இடுக்கி மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக கலெக்டர் விக்னேஸ்வரி தெரிவித்தார்.

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.


துவங்கவுள்ள பருவமழை... தயார் நிலையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம்

அரபிக் கடலில் நிலவி வந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கேரளாவில் மூன்று நாள்களில் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக கோடை காலமான மே மாதம் வெயில் வாட்டி வதைக்கும் ஆனால் இந்த ஆண்டு மே மாதம் அவ்வப்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெக்கை குறைந்தது. அதே போல் அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பருவழை மூன்று நாள்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பத்து நாள்கள் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஒரு சில நாட்களில் துவங்க உள்ளதால், மழையை எதிர்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிலச்சரிவு, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவை ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டுமெனவும், அனைத்து தாலுகாக்களில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும். பேரிடர் பாதிப்பு பகுதிகளில் கர்ப்பிணிகள், உடல், மன நிலை பாதித்தவர்கள், படுக்கை நோயாளிகள், குழந்தைகள் ஆகியோரின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. 2018ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது செயல்பட்ட நிவாரண முகாம்கள் செயல்படுத்தப்படும். அதில் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.


துவங்கவுள்ள பருவமழை... தயார் நிலையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம்

குறிப்பாக மழை அதிகம் பெய்யும் நாட்களில் அணை திறப்பது பகல் வேளையில் துல்லியமாக இருக்க வேண்டும். அது தொடர்பாக பொதுமக்களுக்கு முறையாக முன் அறிவிப்பு வழங்க வேண்டும். சாலையின் இருபுறமும் 5 மீட்டர் சுற்றளவில் மரக்கிளைகளை வெட்ட வேண்டும். மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும்போது வீடுகளுக்கு தனியாக செல்லும் மாணவ, மாணவிகளின் தகவல்களை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை பணிகளுக்கு 2200 போலீசார், 600 சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளதாக போலீஸ், தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் பேரிடர் பாதிப்பு பகுதிகள் அடையாளம் கண்டு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும். 2018ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கருத்தில் கொண்டு பேரிடர் நிவாரண திட்டம் தயார் செய்யப்படும். பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!
திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!
ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?
ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?
ABP Premium

வீடியோ

Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
Embed widget