மேலும் அறிய
Tamilnadu Roundup: மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! அடுத்த 10 நாட்களுக்கு மழை- 10 மணி செய்திகள் இதுதான்
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : twitter
- இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலைகள், ஜி.பி.எஸ். கருவியை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் தனுஷ்
- ராமநாதபுரம் -கீழக்கரை ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா ஒளி உள்ளார் தர்காவின் 851ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!
- தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (மே.23) முதல் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு"
- அரபிக் கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
- திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேர ரத்து
- சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி - சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழப்பு
- ஓசூரில் மூதாட்டி மற்றும் அவரது மருமகனை மிரட்டி, தாக்கி நகை, பணம் பறித்து சென்ற சம்பவத்தில் 5 பேர் கைது 2 பேருக்கு போலீசார் வலை
- மானாமதுரையில் டாஸ்மாக் கடைக்கு நள்ளிரவில் தீ வைத்த மர்ம நபர்கள்.. 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்கள் தீயில் கருகி சேதம்...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்






















