மேலும் அறிய
ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?
நண்பனை கொலை செய்த இருவர் கைது – மதுபோதையில் ஏற்பட்ட தகராறு விபரீதம். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி வெளியீடு.

சிவகங்கை மருத்துவமனை
Source : whatsapp
ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையை செய்த இரண்டு ஆட்ட ஓட்டுனர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி, வெளியீடு.
நண்பனை கொலை செய்த இருவர் கைது – மதுபோதையில் ஏற்பட்ட தகராறு விபரீதம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அனந்தபுரம் பைபாஸ் அருகே நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பத்திரிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டதாவது...,” மானாமதுரை அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லம் என்பவரது வீட்டின் மாடியில், அவரது மகன் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களான குருந்தங்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், இடைக்காட்டூரைச் சேர்ந்த முனீஸ்வரன் ஆகியோர் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், முனீஸ்வரன் சதீஷ்குமாரின் மனைவியைப் பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து முனீஸ்வரனை தாக்கியுள்ளனர். அதில் மது பாட்டிலை உடைத்து முனீஸ்வரனின் கழுத்தை அறுத்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை 11 மணி அளவில் செல்லம் என்பவரது வீட்டின் மாடியில் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மானாமதுரை காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு ஆட்ட ஓட்டுனர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குற்றவாளிகளான சதீஷ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து மேலதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையை செய்த இரண்டு ஆட்ட ஓட்டுனர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















