மேலும் அறிய

மதுரையில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

’’கல்வெட்டில் திருமாலின் வாமன அவதாரம் கோட்டு ஓவியமாக வரையப்பட்டுள்ளது’’

மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடியில் பொது மக்களின் தகவலை தொடர்ந்து தொல்லியல் ஆய்வு செய்துள்ளனர்.  தொல்லியல் ஆர்வலர்கள் முனீஸ்வரன், இலட்சுமண மூர்த்தி,  ஆதி பெருமாள் சாமி மற்றும் மாணவர் சூரிய பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழு கள ஆய்வு  செய்தபோது ஆலமரத்து விநாயகர் கோவில் அருகே குத்துக்கால் பாதி புதைந்த நிலையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டினைப் படி எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு என்பது தெரியவந்தது.

மதுரையில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
 
இது குறித்து உதவிப் பேராசிரியர்   முனீஸ்வரன்,  இலட்சுமண மூர்த்தியிடம் கேட்டபோது,  வேளாண்மை மண்பாண்டம் தொழில் சிறப்பு பெற்ற பெருங்குடியில்   பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே கல்தூண் உள்ளது. அவை மண்ணில் பாதி புதைந்த நிலையில் 5 அடி நீளம் கொண்டகல் தூணில் எட்டுக் கோணம் , இரண்டு பட்டை வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. 
 
கோட்டு ஓவியம்: தூணின் மேல் பகுதி பட்டையில் 3 பக்கம் நில அளவை குறியீடுகள், மற்றொரு பக்கம் திருமாலின் வாமன அவதாரத்தின் குறியீடும் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. கோட்டோவியம் நிலத்தை வைணவ கோவிலுக்கு நிலக்கொடையாகக் கொடையாக கொடுத்ததைச் சுட்டிக்காட்டுகிறது.  

மதுரையில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
 
கல்வெட்டு 
 
பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு ‘மங்கலச் சொல், மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவா் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கொடையானது நிலமாக இருப்பின் அதன் நான்கு எல்லைகள், பொன் என்றால் அதன் அளவு ஆகியவை இடம்பெறும் . இப்பகுதியில் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டு கல்தூணின் கீழ்பட்டை பகுதியில் 12 வரிகள் இடம் பெற்றிருந்தன. இக்கல்வெட்டை மைப்படி எடுத்து ஆய்வு செய்தபோது  எழுத்தமைதியின் வடிவத்தை வைத்து கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் தெரிய வந்தது. பல எழுத்துகள் தேய்மானம் ஏற்பட்டதால் முழுப் பொருளை அறிய முடியவில்லை. தமிழ்நாட்டில் தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற இணை இயக்குநர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டது. இக்கல்வெட்டு நிலதானம் வழங்கிய செய்தியும் ஆவணமாக எழுதி கொடுத்தவரின் பெயர், அதன் நிலத்தின் நான்கு எல்லைப் பகுதியை குறிப்பிட்டுள்ளது. விக்கிரம பாண்டியன் பேரரையான் என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி செய்ததாகவும் அவரின் ஆட்சியில்  நிலதானம் வழங்கியவரையும்  ஆவணமாக எழுதி கொடுத்த குமராஜன் என்பவரின் பெயரும் கல்வெட்டு இறுதி வரியில் இருப்பதை அறிய முடிகிறது.   என்றார் .
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
kodaikanal : இஸ்ரேலியர்களுக்கு AK 47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: போர் பதற்றத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தீவிரம்!
kodaikanal : இஸ்ரேலியர்களுக்கு AK 47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: போர் பதற்றத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தீவிரம்!
விஜய் வருகையால் மிரளும் திமுக! நாஞ்சில் சம்பத் பரபர பேச்சு: அரசியல் களம் சூடுபிடிக்குமா?
விஜய் வருகையால் மிரளும் திமுக! நாஞ்சில் சம்பத் பரபர பேச்சு: அரசியல் களம் சூடுபிடிக்குமா?
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
Embed widget