மேலும் அறிய

சட்டமன்ற தேர்தல் 2026

(Source:  Matrize | *Exit polls are projections; official results on May 4, 2026)

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !

என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. - நிகிதா பேட்டி.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு - நகை காணமல் போனதாக புகாரளித்த புகார்தாரரான நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்: 9ஆம் தேதிக்கு ஆஜராக உத்தரவு.

அஜித்குமார் கொலை வழக்கு
 
சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனத்தை அடுத்த, மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்ற இளைஞர் கடந்த ஆண்டு ஜூன் 27- ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவு
 
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன்முகம்மது நிகிதா விடம் நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கா என்றார். அதற்கு நிகிதா ஆட்சேபனை ஏதும் இல்லை என வாய்மொழியாக கூறிய நிலையில் 9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக கொடுப்பதற்கு உத்தரவிட்டார்.
 
நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்
 
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா...,” நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது. தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள். நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன் அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது.
 
ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது
 
மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்”. எனவும் தெரிவித்தார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் சோகம்: மூடி இல்லாத செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் சோகம்: மூடி இல்லாத செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
கையில் பட்டாக்கத்தியுடன் வந்த ரவுடி... துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
கையில் பட்டாக்கத்தியுடன் வந்த ரவுடி... துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
காதலனுடன் சென்ற மனைவி !! உதவி செய்தவருக்கே துரோகம்
காதலனுடன் சென்ற மனைவி !! உதவி செய்தவருக்கே துரோகம் " என் சாவுக்கு இவர்களே காரணம் " நடந்தது என்ன
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Exit Poll Results :
TN Exit Poll Results : "ஆட்சியை தக்க வைக்கும் திமுக” சாணக்கியா Strategies கணிப்பு..!
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
ADMK Report : 'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி..!
'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் EPS..!
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
TN Exit Poll Results : ”அதிமுகவிற்கு சாதகமாகும் Exit Poll?” எடப்பாடியிடம் கிடைத்த ரகசிய சர்வே..!
”அதிமுகவிற்கு சாதகமாகும் Exit Poll?” எடப்பாடியிடம் கிடைத்த ரகசிய சர்வே..!
GOLD SILVER RATE: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.! இன்று மாலையிலும் சரிந்த தங்கம் விலை; ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.! இன்று மாலையிலும் சரிந்த தங்கம் விலை; ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.!
Annamalai : ‘அண்ணாமலையை விடாத மோடி, அமித் ஷா’ விரைவில் மத்திய அமைச்சர்..?
'மத்திய அமைச்சராகும் அண்ணாமலை?’ இதுதான் காரணமா..?
Donald Trump: “இனி நான் நல்லவனா இருக்க மாட்டேன்“; துப்பாக்கியை கையில் எடுத்த ட்ரம்ப்; என்ன இப்படி கிளம்பிட்டாரு.!
“இனி நான் நல்லவனா இருக்க மாட்டேன்“; துப்பாக்கியை கையில் எடுத்த ட்ரம்ப்; என்ன இப்படி கிளம்பிட்டாரு.!
Embed widget