மேலும் அறிய

Voter List: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்?

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க சுமார் 12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 96 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக தரப்பில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல் பிரச்சார பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதேபோல் இந்திய கூட்டணி தரப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இது ஒரு பக்கம் இருக்க தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்காளர் பட்டியல், தேர்தல் பணிகள் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்றது. அதன்படி நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்டோர் வாக்களிக்க தகுதியானர்வர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 47 கோடி பேர் பெண்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 1.73 கோட்டிக்கு மேற்பட்டோர் 18 முதல் 19 வயது பிரிவை சேர்ந்தவர்கள் அதாவது முதல் முறை வாக்காளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 18 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ‘சிறப்பு சுருக்கமுறை திருத்தம்’ எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை  6,18,9,0348 ஆகும். அதில் ஆண்கள் - 3,03,96,330, பெண்கள் - 3,14,85,724, மூன்றாம் பாலினம் - 8,294 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில்  6,60,419 பேரும், கேவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 4,62,612 பேரும் அடங்குவர். குறைந்தபட்ச வாக்காளர்கள் நாகை மாவட்டம் கீழ்வேளூர் - 1,72,140 உள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை துறைமுகம் 1,72,624 ஆகும். வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாடு வாக்காளர்களின் எண்ணிக்கை 3480 பேர் ஆகும். மாற்றுத்திறனாளிகள் 4,32,805 பேர் உள்ளனர். இதனை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. 

இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்தது. 1957 ஆம் ஆண்டு இது 19.37 கோடியாக உயர்ந்தது. நாடு  முழுவதும் மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களில் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் சுமார் 1.5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Airtel Recharge: ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Airtel Recharge: ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
Embed widget