மேலும் அறிய

ஆன்மீகம் - நவீனத்துவத்தின் கலவையை உணர்கிறேன் - கண் மருத்துவமனையை திறந்துவைத்த பிரதமர் மோடி

இந்த மருத்துவமனை வாரணாசி மற்றும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள பலரின் வாழ்க்கையில் இருளை அகற்றி, ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை பல்வேறு கண் நோய்களுக்கு  விரிவான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும். விழாவில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் மோடி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த புனிதமான காலத்தில் காசிக்கு செல்வது நல்லொழுக்கத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பாகும் என்றார். காசி மக்கள், துறவிகள், கொடையாளர்கள் கருணையுடன் இருப்பதையும் பரம பூஜ்ய சங்கராச்சாரியாரை  தரிசனம் செய்து பிரசாதம் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெறுவதையும் அவர் குறிப்பிட்டார்.

காசியும்  உத்தராஞ்சலும் இன்று மற்றொரு நவீன மருத்துவமனையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், சங்கரரின் தேசத்தில் ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனை அர்ப்பணிக்கப்பட்டது பற்றி  குறிப்பிட்டார். இந்த விழாவில் காசி மற்றும் உத்தராஞ்சல் மக்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோள் ஒன்றினை எடுத்துரைத்த  பிரதமர், ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனை இருளைத் துடைத்து, பலரை ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் என்று கூறினார். கண் மருத்துவமனைக்குச் சென்றபோது, இது ஆன்மீகம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையாக இருப்பதை உணர்ந்ததாகவும், வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கண்பார்வை வழங்குவதில் மருத்துவமனை சேவை செய்யும் என்றும் மோடி கூறினார்.

ஏழைகள் அதிக அளவில் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த கண் மருத்துவமனை பல இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும், மருத்துவ மாணவர்களுக்கான வேலை மற்றும் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளையும் உதவி ஊழியர்களுக்கான வேலைகளையும் உருவாக்கும் என்று மோடி குறிப்பிட்டார்.

குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் சங்கரா கண் அறக்கட்டளையுடன் தனக்கு இருந்த தொடர்பை நினைவுகூர்ந்த பிரதமர், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதியின் குரு முன்னிலையில் சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்ததைக் குறிப்பிட்டார். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் ஆசியைப் பெறுவது மிகுந்த மனநிறைவைத் தருவதாகக் கூறிய அவர், பரம பூஜ்ய ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல பணிகளைச் செய்ததைக் குறிப்பிட்டார்.  

மூன்று வெவ்வேறு மரபுகளுடன் தொடர்புடையது தனிப்பட்ட திருப்திக்குரிய விஷயம் என்று அவர் கூறினார். விழாவை ஆசீர்வதித்த ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதிக்கு நன்றி தெரிவித்த பிரதமர், வாரணாசியின் மக்கள் பிரதிநிதியாக அவரை வரவேற்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
Embed widget