மேலும் அறிய

PM Modi: நாடும், சமூகமும் வளமாகும். மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பெண் குழந்தைகள் - பிரதமர் மோடி ட்வீட்

பெண் குழந்தைகள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நம் சமுதாயத்தை நல்ல முறையில் மாற்றத்தை கொண்டு வர பெண் குழந்தைகள் முக்கிய பங்காற்றுகிறார்கள் என பிரதமர் மோடி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக சமூகத்தில் அவர்களின் நிலையை மேம்படுத்துவதும் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பெண் குழந்தைகள் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என்று பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த அரசாங்கம் பெண் குழந்தைகள் கல்வி பயின்று வளர்ச்சியடைந்து சாதனைகள் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான அவரது எக்ஸ் பக்க பதிவில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தையின் அசைக்க முடியாத மனப்பான்மை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் வளமான திறனையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் நம் நாட்டையும் சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு பெண் குழந்தையும் கற்கவும், வளரவும், செழிக்கவும் வாய்ப்புள்ள ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நமது அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். பெண்குழந்தை பாலின விகிதத்தை அதிகரிக்கவும், பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மோடி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தனது முதன்மைத் திட்டமான 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' அறிமுகப்படுத்தியது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
Embed widget