மேலும் அறிய

BS - III, BS - IV ரக வாகனம் வைத்திருப்பவரா நீங்கள்..? அப்போ 20 ஆயிரம் ரூபாய் ஃபைன்..!

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் மாசுபடுத்தும் வாகனங்களின் பயன்பாட்டு உத்தரவை மீறினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் வகையில், மாசுபடுத்தும் வாகனங்களின் பயன்பாட்டு உத்தரவை மீறினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதனை சமாளிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. முன்னதாக தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், சாலைகள், மின் பகிர்மான கட்டுமானங்கள், பைப்லைன் கட்டுமானங்களுக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டன. அதேபோல் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறு கோரியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் வாகனங்களை ஒற்றைப் படை, இரட்டைப் படை அடிப்படையில் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் சமீபத்திய நிலவரப்படி காற்று மாசு 400க்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. மீறுபவர்களைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் வழக்கமான சோதனைகளை மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கிரேடட் ரெஸ்பான்ஸ் செயல் திட்டத்தின்(graded response action plan) விதி IV இன் கீழ், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வது அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்குவதைத் தவிர, அனைத்து BS-IV வாகனங்களையும், டீசல் லாரிகளும் நகரத்திற்குள் நுழைவதை அரசாங்கம் தடை செய்தது.

"நகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) பரிந்துரைத்த மாசு எதிர்ப்புத் தடைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. எனவே, குறிப்பிட்ட வாகனங்கள் இயக்க தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ. 20000 அபராதம் வசூல் செய்யப்படும்" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவில், சிஎன்ஜி மற்றும் மின்சார லாரிகள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட டீசலில் இயங்கும் நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்குவதைத் தவிர, அனுமதிக்கப்படாது. மேலும், BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் இலகுரக மோட்டார் வாகனங்கள் டெல்லியின் NCTயின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்க தடை விதிக்கப்படும்.

உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி, டெல்லியில் 3 லட்சம் டீசல் இலகுரக வாகனங்கள் BS-VI பிரிவின் கீழ் வராது. மேலும், செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நகர அரசு கடுமையாக்கும். மீறுபவர்களைக் கண்டறிய போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். PUC-களை புதுப்பிக்க மறுத்தால் வாகனப் பதிவு நிறுத்தி வைக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளுககு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 190(2)ன்படி, செல்லுபடியாகும் PUC சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சனிக்கிழமையன்று நகரின் காற்றின் தரம் மோசமான பிரிவில் பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பிஎம் 2.5 வெளியேற்றத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதமும், நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றில் 80 சதவீதமும் போக்குவரத்துத் துறையின் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget