மேலும் அறிய

ஆப்கானிஸ்தான் குறித்து துணிச்சலான பதிவு: ப்ரணீதாவுக்குக் குவியும் பாராட்டு

ஆப்கானிஸ்தான் குறித்து துணிச்சலான கருத்தைப் பதிவிட்டுள்ள நடிகை ப்ரணீதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தான் குறித்து துணிச்சலான கருத்தைப் பதிவிட்டுள்ள நடிகை ப்ரணீதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்த ஆர்ப்பாட்டம் இல்லாத அழகி என்று அறியப்பட்டவர் ப்ரணீதா. தமிழில் கடைசியாக ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும் என்ற படத்தில் நடித்திருந்தார். அண்மையில் இவர் தொழிலதிபர் ஒருவரை மணந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகியே இருக்கிறார். இருப்பினும் அவ்வப்போது சமூகவலைதளங்கள் ஏதேனும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் குறித்து துணிச்சலான கருத்தைப் பதிவிட்டுள்ளதற்கு அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இனி ஜனநாயகத்துக்கு இடமில்லை இனி எல்லாமே இஸ்லாமிய சட்டப்படி தான் நடக்கும். ஆப்கானிஸ்தானை இனி இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று அழையுங்கள் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் சிலர் தலிபான்கள் ஆட்சியை இந்து பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இது குறித்து நடிகை ப்ரணீதா சுபாஷ் தனது சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவில் உள்ள சிலர், இந்து பயங்கரவாதத்தை சுட்டிக்காட்டி ஆப்கானிஸ்தானில் நடப்பதை பூசிமெழுகப் பார்க்கிறார்கள். தலிபான்கள் நடத்தையை நியாயப்படுத்தும் முயற்சி அவர்களின் கற்பனைக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். பாரத தேசமே உனக்கு எதிரி எல்லை கடந்து இல்லை உள்ளுக்குள்ளேயே இதுபோன்றோரால் தான் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தான் குறித்து துணிச்சலான பதிவு: ப்ரணீதாவுக்குக் குவியும் பாராட்டு

ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் இளம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். பாலியல் அடிமைகளாக்கப் பட்டனர் என்ற செய்தி அச்சத்தைக் கடத்துகிறது. 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த ஐஎஸ்ஏஎஃப், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் (International Security Assistance Force ISAF) என்ன செய்து கொண்டிருந்தது? அப்பாவி மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே. ஆப்கன் மக்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்தப் பதிவை அவர் ஆகஸ்ட் 16-ஆம் தேதி பதிவிட்டிருந்தார். தற்போது மீண்டும் ஒரு துணிச்சலான பதிவை அவர் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆளும் அரசு வீழ்ந்து ஆட்சி தலிபான்கள் கையில் சென்றது. தலிபான் ஆட்சி அமைந்ததால் 1996களில் இருந்தபோது மிகக் கடினமான சட்டத்திட்டங்கள் அமலுக்கு வரும், பெண்களின் நிலைமை அதளபாதாளத்துக்குச் செல்லும் என்ற அச்சத்தில் அங்கிருந்து மக்கள் கும்பல் கும்பலாக மற்ற நாடுகளுக்குக் குடிபெயர முயற்சித்து வருகின்றனர். அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்கு தஞ்சம் வழங்குமாறு ஐ.நா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: விஜய் - சங்கீதா திருமண நாள்.. முதல் சந்திப்பு நிகழ்ந்தது எப்படி? - வீடியோவை பகிரும் ரசிகர்கள்!
CM Vijay: விஜய் - சங்கீதா திருமண நாள்.. முதல் சந்திப்பு நிகழ்ந்தது எப்படி? - வீடியோவை பகிரும் ரசிகர்கள்!
Actor Yash: விஜயின் அர்ப்பணிப்பு.. மாற்றம் கொடுத்த தமிழ்நாட்டு மக்கள்.. நடிகர் யஷ் பாராட்டு!
Actor Yash: விஜயின் அர்ப்பணிப்பு.. மாற்றம் கொடுத்த தமிழ்நாட்டு மக்கள்.. நடிகர் யஷ் பாராட்டு!
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
சண்டை சீன் வைக்கச் சொன்ன மோகன்.. தக்லைஃப் செய்த டைரக்டர் சுந்தர்ராஜன் - நடந்தது என்ன?
சண்டை சீன் வைக்கச் சொன்ன மோகன்.. தக்லைஃப் செய்த டைரக்டர் சுந்தர்ராஜன் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!
Udhaynidhi Stalin: கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
Gold and silver rate today : அப்பாடா.! ரூ.10,000 குறைந்தது- தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ..
அப்பாடா.! ரூ.10,000 குறைந்தது- தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ..
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Embed widget