மேலும் அறிய

Nayanthara Interview:‘விருது நிகழ்ச்சியில் ஓரமா உக்கார வச்சாங்க'; பேட்டியில் மனமுடைந்து பேசிய நயன்தாரா!

சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட நயன்தாரா, முந்தைய காலத்தில் கடந்து வந்த கஷ்டங்களையும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களை பற்றியும் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நயன்தாரா ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு  2013 ஆம் ஆண்டு வெளியான  “ராஜா ராணி” படம் மூலமாக கம்-பேக் படமாக கொடுத்தார். அதன் பின்னர் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வரும் கதைகளை தேர்வு செய்து நடித்த அவர், மாயா, டோரா, அறம், அய்ரா, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல  படங்களில் நடித்தார். அவரின் படங்களுக்கு கதாநாயகர்களுக்கு வருவது போல ரசிகர் கூட்டம் அலைமோத அவருக்கு “லேடி சூப்பர்ஸ்டார் நயன்” என்ற பட்டமும் வந்து சேர்ந்தது. 

இதனிடையே தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதத்தில்  மணந்து கொண்ட நயன், இனிமேல் படம் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழ், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் ரவுண்டு கட்டி படங்களில் நடித்து வருகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

அந்த வகையில் தற்போது மாயா இயக்குநர் அஸ்வின் சரவணனுடன் மீண்டும் சேர்ந்து கனெக்ட் என்ற 99 நிமிடம் ஓடக்கூடிய பேய் படத்தில் நடித்துள்ளார், இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதியும், ஹிந்தியில் டிசம்பர் 30 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. 

99 நிமிடம் ஓடக்கூடிய இப்படத்தில் பேய் பிடித்த குழந்தையின் அம்மாவாக அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நயன் முந்தைய காலத்தில் கடந்து வந்த கஷ்டங்களையும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களை பற்றியும் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசும் போது,  “என்னுடைய ஒரு சில கனவுகள் நிறைவேறிவிட்டது. இன்னும் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், ஒரு அளவுக்கு நான் செய்துவிட்டேன் என்று தோன்றுகிறது.

என்னுடைய இருபதுகளில், பல ஆசைகள் இருந்தன; பெண்களை மையமாக கொண்ட படங்கள் அப்போது இல்லை. அந்த சமயத்தில், ஏன் ஹீரோயின்களுக்கு முறையான  இடம் கொடுக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்றால், ஏதோ ஒரு ஓரத்தில் நிற்க வைத்து விடுவார்கள். அதனால்தான் நான் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் செல்வது இல்லை. மரியாதை கொடுக்கப்படும் நிலையை நாம் அடைந்துவிட்டால், அங்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். 



Nayanthara Interview:‘விருது நிகழ்ச்சியில் ஓரமா உக்கார வச்சாங்க'; பேட்டியில் மனமுடைந்து பேசிய நயன்தாரா!

இப்போது, பெண்களை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகிவுள்ளது, இயக்கப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர்களும் அது போன்ற கதையை தயாரிக்க முன்வந்து நிற்கின்றனர்.நான் இதுபோன்ற கதைகளை தேர்வு செய்துதான் நடிக்கிறேன்.

அப்போது பெண்களை வைத்து எடுக்கப்படும் படத்தை தயாரிக்க ஆட்கள் இல்லை. அப்படி எடுக்கும் படங்கள் ஓடுமா என்ற கேள்வியும் இருந்தது; படத்தை தயாரிக்கும், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதும் முக்கியமான விஷயம். 

இந்த சூழல் இப்போது மாறியுள்ளது; தயாரிப்பாளர்கள் முன்வருவதால், இயக்குனர்களும் அதற்கு ஏற்ற கதையை எழுதுகின்றனர். பெண்களை மையமாக கொண்ட படத்திற்கு கொஞ்சமான பட்ஜெட்தான் ஒதுக்கப்படும். ஹீரோக்களின் படம் கோடி கோடியாக வசூல் செய்து வரும் நிலையில், ஏன் பெண்கள் இது போன்ற பெரிய கமர்ஷியல் படத்தில் நடிக்கக்கூடாது என்ற எண்ணம் வருகிறது. சிறு சிறு படங்களில் நடித்து வருகிறேன். விரைவில், நான் பெரிய அளவில் பெண்களை மையமாக கொண்ட படத்தில் நடிப்பேன். அதற்கு முயற்சி செய்வேன்..செய்கிறேன்.” என தன் கருத்துக்களை வெளிப்படுத்தினார்

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget