மேலும் அறிய

நடிகை... டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.. இயக்குநர்... - வலிகளை கடந்து தடம் பதித்த ரோகினியின் கதை...!

நடிகை ரோஹினி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது என்னவோ ஆசை அதிகம் வச்சு.. பாடல் தான். ஆனால் ரோஹினி ஒரு நடிகையான கதை மறுபடியும் படத்தில் அவர் நடிகையாக நடித்த கதாபாத்திரத்தின் கதையையும் விட வேதனைகள் நிறைந்தது.

நடிகை ரோஹினி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது என்னவோ ஆசை அதிகம் வச்சு.. பாடல் தான். ஆனால் ரோஹினி ஒரு நடிகையான கதை மறுபடியும் படத்தில் அவர் நடிகையாக நடித்த கதாபாத்திரத்தின் கதையையும் விட வேதனைகள் நிறைந்தது.

ரோஹினியின் சொந்த ஊர் ஆந்திரா. அவரது தந்தை பஞ்சாயத்து அலுவலக வேலையில் இருந்தார்.  ரோஹினிக்கு 5 வயது இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட தந்தை மறுமனம் புரிந்து கொண்டார். சினிமா ஆசையில் அவர் வேலையை விட்டுவிட்டு சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு அல்ல ரோஹினிக்கு. 6 வயதில் யசோதா படத்தில் கிருஷ்ணராக வேடமிட்டதுதான் அவரின் முதல் திரைப்படம்.

அதன் பின்னர் குழந்தை நட்சத்திரமாக என்டி ராமராவ், ஜமுனா, நாகேஸ்வரராவ் என உச்ச நடிகர்களின் குழந்தையாக 150 படங்களில் நடித்தார்.

தமிழிலும் மேயர் மீனாட்சி, முருகன் அடிமை படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் 5 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை பள்ளியில் சென்று படித்த அவரை மீண்டும் துரத்தியது சினிமா. தந்தை தொழிலில் நஷ்டமடைய, மீண்டும் ரோஹினியை நடிக்க வற்புறுத்தினார். 7வது படிக்கும் போதிருந்தே நடிப்பு. பின்னர் 1982ல் கக்கா என்ற மலையாளப் படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்துள்ளார். அப்போதுதான் அவர் சினிமா தான் தனது தொழில் என்பதை உணர்ந்துள்ளார். அந்தப் படத்தின் வெற்றி சினிமாவை நேர்த்தியுடன் அணுக அவருக்குச் சொல்லிக் கொடுத்தது. அதனால் நிறைய மலையாளப் படங்களைத் தேர்வு செய்து நடித்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

மலையாளத்தில் வெற்றி கிட்டினாலும் தமிழ் சினிமா அவரை அவ்வளவு எளிதில் வரவேற்றுவிடவில்லை. அவர் தமிழில் அண்ணி என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடித்தார். பின்னர் பவுனுபவுனுதான் படம் அவரை விமர்சன ரீதியாக அடையாளப் படுத்தியது. பாலுமகேந்திராவின் மறுபடியும், கமல்ஹாசனின் மகளிர் மட்டும் அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தன. தாமரை, புதுப்பிறவி போன்ற படங்களில் நடித்தார். இருந்தாலும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வராததற்கு அவரது உயரமும், மூக்கும் காரணமாகக் கூறப்பட்டது. உருவக் கேலிக்கு ஆளானாலும் அதை அவர் பொருட்படுத்தியதே இல்லை.

அவர் தெலுங்கில் த்ரீ என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்று தன் மீதான உருவக் கேலியை சுக்குநூறாக உடைத்தெறிந்தார். கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். தமிழில் இன்னும் தடம் பதிக்கும் ரோல்களுக்காக காத்திருப்பதாகக் கூறுகிறார்.

பின்னர் நடிப்பிற்கு சில காலம் ஓய்வு கொடுத்த ரோஹினி, நடிகர் ரகுவரனை காதல் திருமணம் செய்தார். ஆனால், வெறும் 10 ஆண்டுகளில் அந்தத் திருமண உறவு முறிந்தது. மகன் ரிஷியுடன் தனியாகச் சென்ற அவர் மகனை வளர்க்க பெரும் சிரமப்பட்டுள்ளார். பொருளாதாரத் தேவைக்காக மீண்டும் நடிக்க வந்த அவரை விருமாண்டி படம் வரவேற்றது. அதன் பின்னர் தொடர்ந்து இன்று வரை நடிக்கிறார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நெருக்கத்தில் இருக்கும் அவர் சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறார். 

நமக்கு நடிகையாக மட்டுமே தெரியும் ரோஹினி சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. ராவணன் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு அவர் தான் குரல். சில படங்களுக்கு வசனமும் எழுதிய அவர் அப்பாவின் மீசை என்ற படத்தை இயக்கியுள்ளார். எதிர்காலத்தில் முழு நேர இயற்கை விவசாயியாக வேண்டும், முடிந்தால் குழந்தைகளுக்கான ஒரு பள்ளி, இளைஞர்களுக்கான ஒரு யூடியூப் சேனல் மற்றும் ரேடியோ பண்பலை என்று செட்டிலாகிவிட வேண்டும் என்பது தான் ரோஹினியின் கனவாம்.

அவரின் கனவு மெய்ப்பட வாழ்த்துவோம்.

தலைப்பு செய்திகள்

திடீர் திருமணமா? விளம்பரமா ? ஜான்வி கபூரின் வைரல் திருமண வீடியோ பின்னணி என்ன?
திடீர் திருமணமா? விளம்பரமா ? ஜான்வி கபூரின் வைரல் திருமண வீடியோ பின்னணி என்ன?
Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
Ilayarajaa: சத்யராஜ் படத்தின் அந்த காட்சிக்கு மட்டும் இசையமைக்க மறுத்த இளையராஜா - எந்த படம்? என்ன சீன்?
Ilayarajaa: சத்யராஜ் படத்தின் அந்த காட்சிக்கு மட்டும் இசையமைக்க மறுத்த இளையராஜா - எந்த படம்? என்ன சீன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi : ‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு திமுகவில் கிடைக்கப்போகும் பதவி என்ன ?
‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு என்ன பதவி ?
Gold Silver Rate Today Aug.27th: ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
TVK vs DMK: கலர் டிவி உங்க அப்பா வீட்டுப் பணத்திலா கொடுத்தது? திமுக-வுக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கலர் டிவி உங்க அப்பா வீட்டுப் பணத்திலா கொடுத்தது? திமுக-வுக்கு தவெக கேள்வி
TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
Tambaram to Chengalpattu : டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! -தவெக அரசின் மாஸ் பிளான்
டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! - தவெக அரசின் மாஸ் பிளான்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!
பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
Embed widget