மேலும் அறிய

Premalatha: “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு

விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான மாணிக்கம் தாகூரை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

விருதுநகர் தொகுதியில தேமுதிக வேட்பாளர் வீழ்த்தப்படவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் ஆரம்பத்தில் இருந்து தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற  எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பாஜக தரப்பில் இருந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இறுதியாக அதிமுகவுடன் தேமுதிக கைகோர்த்தது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. 

இதில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான மாணிக்கம் தாகூரை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் தோற்றார். இது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. இப்படியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் இ-மெயில் வழியாக புகார் மனு அளிக்கப்பட்டது” என தெரிவித்தார். 

மேலும், ”தேமுதிக இனி வரும் காலங்களில் வீர நடை போடும். விஜயபிரபாகர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு இருக்கிறார். இதற்கான ஆதாரம் உள்ளது. விருதுநகரில் மட்டும் தபால் வாக்குகளை முதலில் எண்ணவில்லை. கடைசியில் எண்ணினார்கள். விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  எனக்கு தொலைபேசி மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். அதிமுக - தேமுதிக இணைந்து செயல்பட்டுள்ளோம். தேர்தல் தோல்விக்கு யாரையும் குறை சொல்லவில்லை. மேலும் இவ்விவகாரத்தில் நீதிமன்றம் சென்றால் உடனடியாக தீர்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. அதனால் தான் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். இனிவரும் காலங்களிலும் தேமுதிக - அதிமுக கூட்டணி தொடரும்.

தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் நல்ல முறையில் வாக்குகளை பெற்றுள்ளனர். மத்திய சென்னையை தவிர மற்ற தொகுதிகளில் நிறைய வாக்குகள் கிடைத்துள்ளது. விருதுநகர் விஜய பிரபாகரன் கடைசி வரை போராடி தோற்றதாக அறிவிக்கப்பட்டார். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எத்தனையோ தேர்தல்களை நாங்கள் சந்தித்துள்ளோம். தோல்வி என்பது புதிதல்ல” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget