மேலும் அறிய

Premalatha: “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு

விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான மாணிக்கம் தாகூரை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

விருதுநகர் தொகுதியில தேமுதிக வேட்பாளர் வீழ்த்தப்படவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் ஆரம்பத்தில் இருந்து தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற  எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பாஜக தரப்பில் இருந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இறுதியாக அதிமுகவுடன் தேமுதிக கைகோர்த்தது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. 

இதில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான மாணிக்கம் தாகூரை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் தோற்றார். இது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. இப்படியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் இ-மெயில் வழியாக புகார் மனு அளிக்கப்பட்டது” என தெரிவித்தார். 

மேலும், ”தேமுதிக இனி வரும் காலங்களில் வீர நடை போடும். விஜயபிரபாகர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு இருக்கிறார். இதற்கான ஆதாரம் உள்ளது. விருதுநகரில் மட்டும் தபால் வாக்குகளை முதலில் எண்ணவில்லை. கடைசியில் எண்ணினார்கள். விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  எனக்கு தொலைபேசி மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். அதிமுக - தேமுதிக இணைந்து செயல்பட்டுள்ளோம். தேர்தல் தோல்விக்கு யாரையும் குறை சொல்லவில்லை. மேலும் இவ்விவகாரத்தில் நீதிமன்றம் சென்றால் உடனடியாக தீர்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. அதனால் தான் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். இனிவரும் காலங்களிலும் தேமுதிக - அதிமுக கூட்டணி தொடரும்.

தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் நல்ல முறையில் வாக்குகளை பெற்றுள்ளனர். மத்திய சென்னையை தவிர மற்ற தொகுதிகளில் நிறைய வாக்குகள் கிடைத்துள்ளது. விருதுநகர் விஜய பிரபாகரன் கடைசி வரை போராடி தோற்றதாக அறிவிக்கப்பட்டார். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எத்தனையோ தேர்தல்களை நாங்கள் சந்தித்துள்ளோம். தோல்வி என்பது புதிதல்ல” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தலைப்பு செய்திகள்

NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget