மேலும் அறிய

ராணுவ வீரரின் மகன் கடத்தி கொலை; பெண்ணிற்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு

கலசபாக்கம் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு துணை ராணுவ வீரரின் மகனை கடத்தி கொலை செய்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை அளித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

கலசபாக்கம் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு துணை ராணுவ வீரரின் மகனை கடத்தி கொலை செய்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை அளித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா வெளுங்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துணை ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது மனைவி பரிமளா, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் வினோத் என்ற வினோத்குமார் வயது (12)  கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் வினோத்குமார் வீடு திரும்பவில்லையாம். பின்னர் வினோத்குமாரை அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலசபாக்கம் காவல்நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ராமகிருஷ்ணனின் தொலைப்பேசிக்கு தொடர்பு கொண்ட மர்மநபர்கள், வினோத்குமாரை கடத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். 

 


ராணுவ வீரரின் மகன் கடத்தி கொலை; பெண்ணிற்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு

அதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மாயமான வினோத்குமாருடன் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவன் வினோத்குமாரை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவனிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் சாந்தி என்ற பெண் தான் வினோத்குமாரை அழைத்து வர சொன்னதாக அவர் கூறியுள்ளார். பின்னர் சாந்தியிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில், அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததால் வினோத்குமாரை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தியதும், காவல்துறை விசாரணை நடத்துவதை அறிந்ததும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று சிறுவன் வினோத்குமாரை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சாந்தியையும், சம்பந்தப்பட்ட மாணவனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 


ராணுவ வீரரின் மகன் கடத்தி கொலை; பெண்ணிற்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு

 

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் சாந்தியின் நண்பர்களான சென்னையை சேர்ந்த சுபாஷ், பசுபதி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் வினோத் குமார் கொலை சம்பவத்தின்போது அதில் தொடர்புடைய மாணவனுக்கு 15 வயது என்பதால் திருவண்ணாமலை சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கை விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜமுனா தீர்ப்பு கூறினார். அதில் சிறுவன் வினோத்குமாரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக சாந்திக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சுபாஷ் மற்றும் பசுபதி மீது போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்களை விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சாந்தி பலத்த காவல்துறை காவலுடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget