மேலும் அறிய

Mysore doctor murder: சிகிச்சை ரகசியத்தை சொல்லாத நாட்டு வைத்தியர்: ஒரு வருடம் சித்ரவதை செய்து கொலை

சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக மைசூரை சேர்ந்த நாட்டு வைத்தியரை கடத்தி,ஒரு வருடத்திற்கு மேல் வீட்டு சிறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய விவகாரத்தில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பாரம்பரிய நாட்டு வைத்தியர்:

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஷாபா செரீப் என்பவர் பாரம்பரிய நாட்டு வைத்தியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மைசூரில் பைல்ஸ் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு விரைவில் நோய் குணமானதால் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ,கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஷாபா ஷெரீப்பிடம் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷாபா ஷெரீப் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மைசூர் போலீசில் புகார் செய்திருந்தனர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
Mysore doctor murder: சிகிச்சை ரகசியத்தை சொல்லாத நாட்டு வைத்தியர்:  ஒரு வருடம் சித்ரவதை செய்து கொலை

தொழிலதிபர் ஷெபின் அஷ்ரப்:

இந்த நிலையில் கடந்த மாதம் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் நிலம்பூர் பகுதியை சேர்ந்த ஷெபின் அஷ்ரப் என்ற தொழிலதிபர் நிலம்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். இந்த புகாரில் தனது உதவியாளர் உட்பட ஏழு பேர் வீடு புகுந்து தன்னை கட்டிப்போட்டு 7 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து நிலம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் .இதில் ஷெபினின் உதவியாளரான நவ்ஷாத் என்பவரை போலீசார் கைது செய்தனர் மற்றும் ஆறு பேரையும் தேடி வந்தனர். இவர்களில் ஐந்து பேர் கடந்த மாதம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதை அடுத்து திருவனந்தபுரம் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தானாக சிக்கிய தொழிலதிபர்:

மைசூர் வைத்தியர் ஷாபா ஷெரீப் குறித்து ஷெபின் அஷ்ரபுக்கு தெரியவந்துள்ளது.  இதை அடுத்து அவரை கடத்தி மிரட்டி சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொண்டு தானும் பைல்ஸ் நோய்க்கு சிகிச்சை தொடங்கி அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என தொழிலதிபர் ஷெபின் அஷ்ரப் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வைத்தியர் ஷாபா ஷெரீப்பை மைசூரிலிருந்து தொழிலதிபர் கடத்தியுள்ளார். பின்னர் ஷெபின் அவரை ஊரில் உள்ள தன்னுடைய வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்துள்ளார் .அவரை சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்து கொடுமைப்படுத்தி சிகிச்சை ரகசியத்தை கூறுமாறு மிரட்டியுள்ளார் . ஆனால் அதற்கு ஷாபா ஷெரீப் மறுத்துள்ளார்.

ரகசியத்தை கூறாததால் - துண்டு துண்டாக வெட்டி கொலை:

ஒரு வருடத்திற்கு மேலாக அடித்து கொடுமைப்படுத்தியும் அவர் சிகிச்சை ரகசியத்தை கூறாததால், 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழில் அதிபர் அஷ்ரப் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஷாபா ஷெரீப்பை கொலை செய்தார். பின்னர்  வைத்தியரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அங்குள்ள ஆற்றில் வீசியுள்ளார். நிலம்பூர் போலீஸின் தீவிர விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்தன . மைசூர் வைத்தியரை கொடுமைப்படுத்தும் ஒரு சில வீடியோக்களையும் அஷ்ரபின் கூட்டாளிகள் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தனர். இந்த வீடியோக்களை கைப்பற்றிய போலீசார் ஷாபா ஷெரீப் இன் உறவினர்களுக்கு காண்பித்துள்ளனர் .வீடியோவில் இருப்பது ஷாபாஸ் ஷெரீப் தான் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்த பின்பு  நாட்டு வைத்தியரை கடத்தி கொலை செய்த தொழிலதிபர் அஷ்ரப் மற்றும் அவரது கூட்டாளிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


Mysore doctor murder: சிகிச்சை ரகசியத்தை சொல்லாத நாட்டு வைத்தியர்:  ஒரு வருடம் சித்ரவதை செய்து கொலை

முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் தலைமறைவு:

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இவர்களைத் தவிர முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் மேலும் ஐந்து பேர் தற்போது தமிழகத்தில் தலைமறைவாகி உள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம்-ல் இருந்து குற்றவாளிகளில் ஒருவர் பணம் எடுக்கும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.இதைத்தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை சல்லடை போட்டு தேடி வருகின்றனர், இவர்களை கண்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவுமாறு, கேரளா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Mysore doctor murder: சிகிச்சை ரகசியத்தை சொல்லாத நாட்டு வைத்தியர்:  ஒரு வருடம் சித்ரவதை செய்து கொலை

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget