Scissor in Stomach: இப்படி ஒரு டாக்டரா..! உ.பி., மக்கள் ஷாக், 17 வருடங்களாக வயிற்றில் கத்திரிக்கோல்..
Scissors in Stomach: உத்தரபிரதேசத்தில் பெண்ணின் வயிற்றில் 17 வருடங்களாக இருந்த கத்திரிக்கோல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

Scissors in Stomach: உத்தரபிரதேசத்தில் பெண்ணின் வயிற்றில் 17 வருடங்களாக இருந்த கத்திரிக்கோல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
வயிற்றில் கத்திரிக்கோல்:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மருத்துவ அலட்சியம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 17 ஆண்டுகளாக ஒரு பெண் தன் வயிற்றில் சுமந்து கொண்டிருந்த, அறுவை சிகிச்சை கத்தரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. சந்தியா பாண்டே தனது குழந்தையின் பிரசவத்தின்போது பிப்ரவரி 28, 2008 அன்று 'ஷி மெடிக்கல் கேர்' நர்சிங் ஹோமில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அங்கு தான் இந்த மருத்துவ தவறு நடைபெற்றுள்ளதாக, பாதிக்கப்பட்டவரின் கணவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
நடந்தது என்ன?
சந்தியா எனும் பெண் பேறுகால அறுவை சிகிச்சைக்குப் பின்பு தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல ஆண்டுகளாக ஏராளமான மருத்துவர்களை சந்தித்தும், சந்தியாவின் உடல்நிலையில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் கத்தரிக்கோல்க இருப்பது தெரியவந்தது. அப்போது தான் 17 ஆண்டுகளாக அவர் அனுபவித்து வந்த வலிக்கு காரணம் என்ன என்பது அம்பலமானது.
In a shocking case of alleged medical negligence in UP's Lucknow, a scissor was recovered from the abdomen of a woman 17 years after it is claimed to have been left there during the operation to deliver a child in 2008. Husband of the women has now shot a complaint against the… pic.twitter.com/6qiI6mtmga
— Piyush Rai (@Benarasiyaa) March 28, 2025
அறுவை சிகிச்சை:
கத்திரிக்கோல்கள் இருப்பது உறுதியானதும் அந்த பெண் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (KGMU) அனுமதிக்கப்பட்டார். அங்கு மார்ச் 26 அன்று ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அவை வெற்றிகரமாக அகற்றப்பட்டது. KGMU செய்தித் தொடர்பாளர் சுதிர் சிங், இந்த சம்பவம் குறித்த விவரங்களை உறுதிப்படுத்தினார், இந்த நடவடிக்கை சவாலானது என்றாலும், இறுதியில் அது வெற்றி பெற்றது என்றும், சந்தியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் என்றும் கூறினார்.
போலீசில் புகார்:
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அரவிந்த் குமார் பாண்டே, 2008 ஆம் ஆண்டு தனது மகளுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், மருத்துவரின் அலட்சியத்தால் தனது மனைவி பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரினார். இந்த வழக்கு சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவி, இந்தியாவின் சுகாதார அமைப்பில் மருத்துவ பொறுப்புணர்வைப் பற்றிய கவலைகளைத் தூண்டியது. இருப்பினும், தக்கவைக்கப்பட்ட அறுவை சிகிச்சை கருவிகள் அரிதானவை, ஆனால் கண்டறியப்படாவிட்டால் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

