மேலும் அறிய

Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?

DEADLIEST EARTHQUAKES: உலகில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிக மோசமான நிலநடுக்கம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

DEADLIEST EARTHQUAKES: மியான்மர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை  ஆயிரத்தை 600-ஐ கடந்துள்ளது.

மியான்மரை உலுக்கு எடுத்த நிலநடுக்கம்:

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய மியான்மரில் உள்ள சகாயிங்கின் வடமேற்கில் பிற்பகல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில நிமிட இடைவெளியிலேயே 6.4 ரிக்டர் அளவிலான மற்றொரு நில அதிர்வும் ஏற்பட்டது.

மியான்மரின் பெரும்பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, பாலங்கள் இடிந்து விழுந்தன, சாலைகள் விரிசல் அடைந்தன. இந்த பேரழிவு தாய்லாந்து வரை பரவியது, அங்கு பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்து பலரின் உயிரைப் பறித்தது. கடந்த நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாட்டை உலுக்கிய மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றான இந்த நிலநடுக்கம், விமான நிலையங்களையும் ஸ்தம்பிக்க வைத்தது. 

பாதிப்புகள் என்ன?

மியான்மரின் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, குறைந்தது 2,900 கட்டமைப்புகள், 30 நெடுஞ்சாலைகள் மற்றும் ஏழு பாலங்கள் பூகம்பத்தால் அழிக்கப்பட்டன.  நய்பிடாவில் உள்ள விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் இடிந்து விழுந்ததால், அதை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் சேவையின் முன்கணிப்பு மாதிரியாக்கம், மியான்மரின் இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களை விமானங்கள் மூலம் அனுப்பின.

உலகின் மோசமான நிலநடுக்கங்கள்:

இந்நிலையில், வரலாற்றில் இதுவரை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிக மோசமான நிலநடுக்கங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

  • ஜனவரி 23, 1556 அன்று,சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கம், 830,000 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வரலாற்றில் மிகவும் மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 8.0 முதல் 8.3 வரை ரிக்டர் அளவில் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • 2010 ஆம் ஆண்டு ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் போர்ட் -ஓ-பிரின்ஸ் பெருநகரப் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்தியது. சுமார் 300,000 மக்களைக் கொன்றது மற்றும் 1,500,000 பேர் வீடுகளை இழந்தனர். ஜனவரி 12 ஆம் தேதி மாலை 4:53 மணிக்கு ஹைதி தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸிலிருந்து தென்மேற்கே சுமார் 15 மைல் (25 கிமீ) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.0 ரிக்டர் அளவைப் பதிவு செய்தது. அடுத்தடுத்து 5.9 மற்றும் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களும் பதிவாகின
  • ஜுலை 28, 1976 அன்று சீனாவின் டாங்ஷான் பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவானது. இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 469 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்ததாக கூறப்படுகிறது.
  • டிசம்பர் 26, 2004 அன்று, இந்தோனேசிய தீவான சுமத்ராவின் கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்  தூண்டப்பட்ட சுனாமி இந்தியப் பெருங்கடல் முழுவதும் பரவி, கிழக்கு ஆப்பிரிக்கா வரையிலான கடலோரப் பகுதிகளை நாசமாக்கியது. அதன் விளைவாக 13 நாடுகளில் குறைந்தது 230,000 மக்கள் உயிரிழந்தனர். இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் மற்றும் தாய்லாந்து ஆகியவை பெரும் சேதத்தை சந்தித்தன.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
Israel Atrocity: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
வெற்றி நிச்சயம்; உணவு, இருப்பிடம், பயிற்சியோடு ரூ.12 ஆயிரம்- வேலையில்லாத இளைஞர்களுக்கு புது திட்டம்
Embed widget