மேலும் அறிய

கும்பகோணத்தில் நகை பாலிஷ் போடும் கடையில் இருந்து நகைகள் திருடிய 2 பேர் கைது

கரிகாலனிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை பாலிஷ் செய்வதற்காக கொடுத்து வைத்திருந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நகை பாலிஷ் போடும் கடையில் இருந்து நகைகளை திருடிய சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கர்ணகொல்லை பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள முடுக்கு சந்து பகுதியில் நகைகளுக்கு பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தாராசுரம் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

கரிகாலனிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை பாலிஷ் செய்வதற்காக கொடுத்து வைத்திருந்தனர். இந்நிலையில் கரிகாலன் மற்றும் ராஜா இருவரும் கடந்த 4ம் தேதி இரவு வழக்கம் போல் வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் 5ம் தேதி காலை கடைக்கு வந்து பார்த்த போது, கடையில் வாடிக்கையாளர்கள் பாலிஷ் செய்வதற்காக கொடுத்திருந்த 30 கிராம் தங்க நகைகள், மற்றும் 20 வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.


கும்பகோணத்தில் நகை பாலிஷ் போடும் கடையில் இருந்து நகைகள் திருடிய 2 பேர் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த கரிகாலன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடையின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் சம்பவ இடத்தில் இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ஆசிஷ் ராவத் உத்தரவின்படி, கும்பகோணம் டிஎஸ்பி மகேஷ்குமார் மற்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மேற்பார்வையில், தனிப்படை எஸ்ஐ கீர்த்திவாசன் தலைமையில் எஸ்எஸ்ஐக்கள் சுபாஷ், ராஜா, செல்வகுமார், தலைமை ஏட்டுகள் கதிஷ்,  பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, சண்முகசுந்தரம், செந்தில்குமார், ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து கும்பகோணம், காரைக்கால், திருச்சி ஆகிய பகுதிகளில் கொள்ளையர்களை தேடினர் வந்தனர்.


கும்பகோணத்தில் நகை பாலிஷ் போடும் கடையில் இருந்து நகைகள் திருடிய 2 பேர் கைது

மேலும் கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் தீவிரமாக முயன்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில் மேற்படி கொள்ளையில் ஈடுபட்டது திருச்சி மாநகரம் குட்செட் ரோடு பகுதி செபாஸ்தியார் கோயில் தெருவை சேர்ந்த நெப்போலியன் மகன் ஜான் போஸ் (37), திருச்சி அடைக்கல மாதா தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் முருகவேல் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அந்த இருவரையும் போலீசார் திருச்சியில் கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 55 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
Embed widget