TN Budget 2025: 1000 யூனிட் இலவச மின்சாரம் முதல் "விசைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம்" வரை - விசைத்தறியாளர்களின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
விசைத்தறியாளர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதி கூறிய இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றம் செய்தும் கொடுத்துள்ளார்கள்.

தமிழ்நாடின் 2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்துடன் நாளை நடைபெற உள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை வெளியிட உள்ளார். இந்த நிலையில் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விசைத்தறி மேம்பாட்டுக்கான திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்து, நிதி ஒதுக்க கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் இரா.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக 5 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். கடந்த பல வருடங்களாக விசைத்தறி தொழில் குறிப்பாக தமிழகத்தில் பெரும் இன்னலுக்கு உண்டாகி தற்போது கொங்கு மண்டலத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கு, மேற்பட்ட விசைத்தறிகள் பழைய இரும்புக்கு உடைக்கப்பட்டு,
உரிமையாளர்களும் தொழிலாளர்களும் தொழிலை விட்டு வெளியேறி உள்ளார்கள். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் துணிகளை மேம்படுத்துவதற்காக டையிங், ப்ராஸிங், பிரின்டிங் செய்ய இடர்பாடு உள்ள காரணத்தால் பெரும்பாலான காடா துணிகள் வட மாநிலங்களில் சென்று அங்கு துணிகளை மேம்படுத்தி, கவர்மெண்ட் இன் துணிகளாக தைய்க்கப்பட்டு பின்பு தமிழ்நாட்டுக்கு விற்பனைக்கு வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் ஜவுளி த்துறை சார்ந்த பொருளாதார சுழற்சிமுறை பெரிதும் பாதிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி போன்ற வருவாயும் குறைந்து கொண்டுள்ளது. தமிழக அரசு பொறுத்தவரை விசைத்தறியாளர்களுக்கு தங்கள் தேர்தல் வாக்குறுதி கூறிய இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 750 யூனிட் மின்சாரத்தில் இருந்து 1000 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றம் செய்தும் கொடுத்துள்ளார்கள். மேலும் அழிந்து கொண்டிருக்கும் தமிழக விசைத்தறிகளை காக்கும் பொருட்டு, தமிழக அரசு இந்தாண்டு நிதி நிலை அறிக்கையில் ஜவுளித் துறைகளை தமிழக முன்னேற திட்டங்களை வகுத்தும் நிதிகளை ஒதுக்கியும் குறிப்பாக விசைத்தறி கூடங்களுக்கு மானியத்துடன் கூடிய சூரிய மின்னொளி திட்டம் அமைக்கவும், சாதா விசைத்தறிகளை நாடாயில்லா விசைத்தறிகளாக மாற்றம் செய்யவும், விசைத்தறிகளை மேம்படுத்த திட்டங்கள் அறிவித்து அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கி தர வேண்டும். தமிழகத்தில் ஒரு நாளைக்கு உற்பத்தியாகும் 2 கோடி காடா துணிகளை தமிழகத்திலேயே டையிங், பிராசசிங், பிரின்டிங் செய்ய அரசு திட்டம் வகுத்து, செயல்படுத்த வேண்டும். மேலும் கைத்தறி துறையை காப்பாற்ற எவ்வாறு ரக ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றி இன்று வரை கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது தானியங்கி வருகையால்
பெரும்பாலும் காடா துணிகள் விசைத்திறிகளை விட 10 மடங்கு உற்பத்தி செய்யப்பட்டும், அதனைத் தொடர்ந்து தற்போது மதிப்பு கூட்டப்பட்ட துணிகளையும் உற்பத்தி செய்து வருகிறார்கள். இதனால் விசைத்தறிகளை நம்பியுள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இழந்தும், வாழ்வாதாரம் இழந்து உள்ளார்கள். ஆதலால் தானியங்கி தறியிலிருந்து விசைத்தறிகளை காப்பாற்ற புதியதாக "விசைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம்" தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

