மேலும் அறிய

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம் | Pakistan Peshawar Blast

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் எல்லைப் படை தலைமையகத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தற்கொலைத் கோரத் தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகளால் அப்பகுதியே அதிர்ந்ததுள்ளது. இந்தத் தாக்குதலில், இதுவரை மூன்று பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெஷாவரில் உள்ள ஃபெடரல் கான்ஸ்டபுலரி (Federal Constabulary) தலைமையகத்தில் நிகழ்ந்துள்ளது. அதிகாலை, தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகள் இந்த வளாகத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர்.

முதன்முதலில், முதல் தற்கொலைத் தாக்குதல் நடத்திய நபர், தலைமையகத்தின்  மேயின் கேட்டில் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டாவது பயங்கரவாதி வளாகத்தினுள் நுழைய முயற்சி செய்தபோது, ​​அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.  இந்தத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் பலத்த துப்பாக்கிச் சண்டை சத்தம் கேட்டதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த தகவல் கிடைத்தவுடன், பாகிஸ்தான் ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் அப்பகுதிக்கு விரைந்து தலைமையகத்தின் பகுதியை முழுவதுமாகச் சுற்றி வளைத்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, அப்பகுதியில் யாரும் செல்லாதவாறு தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "பயங்கரவாதிகளைத் தோற்கடிக்கும் உறுதியில் இருந்து பாகிஸ்தானைப் பிரிக்க முடியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
Namakkal power cut: நாமக்கலில் நாளை(25-05-2026) மின் தடை.. எந்தெந்த இடங்களில் முழு விவரம் இதோ!
Namakkal power cut: நாமக்கலில் நாளை(25-05-2026) மின் தடை.. எந்தெந்த இடங்களில் முழு விவரம் இதோ!
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget