ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? என்று பிரபல நடிகை நீலிமா ராணி தெரிவித்துள்ளார்.

கெளதம் கார்த்திக் கதாநாயனாக நடித்த திரைப்படம் ஆகஸ்ட் 16 1947. சுதந்திர கால கட்டத்தில் நடக்கும் திரைக்கதையான இந்த படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் பிரபல நடிகை நீலிமா ராணி நடித்திருப்பார்.
ஜாக்கெட் இல்லாமல் நடித்த நீலிமா:
இந்த படத்தில் அந்த கால காட்சிகளை தத்ரூபமாக காட்டும் விதமாக ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டுமே கட்டி நீலிமா ராணி நடித்திருப்பார். இந்த காட்சியில் நடித்தது குறித்து அவர் பேட்டி ஒன்றில் விளக்கமாக கூறியிருப்பார். அது குறித்து கீழே காணலாம்.
அவர் கூறியதாவது,
எப்படி இருந்தது?
எனக்கு அது ஒரு விஷயமாகவே தெரியவில்லை. ஏனென்றால் அப்போதுதான் எனக்கு குழந்தை பிறந்து 3. 4 மாதங்கள் ஆகியது. பாப்பா பிறந்த தருணத்தில்தான் நான் உடனே நடிக்க வந்துவிட்டேன். உடனே ருத்ரனும் நடந்தது. இரண்டுமே எனக்கு ஒரே நேரத்தில்தான் நடந்தது.
பிரசவத்திற்கு பிறகு மிகவும் விரைவாகவே இந்த படங்கள் நடந்தது. அப்படி பார்த்தோம் என்றால் உதாரணத்திற்கு ஏராளமானோர் உள்ளனர். இந்த கேள்வியை எழுப்பும்போதே இந்தியன் படத்தில் கமல்ஹாசன்தான் நினைவுக்கு வருகிறார். அவர்களை மிஞ்சும் அளவிற்கா நாம் ஏதும் செய்துவிடப்போகிறோம்? கண்டிப்பாக இல்லை. உங்கள் உணர்வுகளையும், நடிப்பையும் பார்க்கும்போது இது ஒரு விஷயமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரபலமான நடிகை:
தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக நடித்து வருபவர் நீலிமா ராணி. தேவர் மகன் படம் மூலமாக திரையில் அறிமுகமானாலும் தொலைக்காட்சித் தொடர் மூலமாகவே மிகவும் பிரபலமானார். ஒரு பெண்ணின் கதை மூலமாக தமிழில் அறிமுகமான அவர் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள் ஆகிய சீரியல்கள் மூலமாக பிரபலமானார். இறுதியாக வானத்தைப் போல சீரியலில் நடித்தார். அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே நீலிமா ராணி உள்ளார். அவர் பொன்ராம் இயக்கிய ஆகஸ்ட் 16, 1947 படத்தில் இந்த காட்சியில் நடித்திருப்பார். அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து முக்கியமான வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகர்களின் சகோதரி, கதாநாயகிகளின் தோழியாக நடிக்க வேண்டும் என்றால் முதல் தேர்வாக நீலிமா ராணி இருந்து வந்தார். படங்களை காட்டிலும் சீரியல் மூலமாக மிகவும் பிரபலமான நீலிமா ராணிக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த இந்த நேர்காணல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.























