மேலும் அறிய

Lady DSP Attack : பெண் DSP வயித்தில் குத்து..ESCAPE-ஆன அந்த நபர்! வலை வீசும் போலீஸ்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கும்பலாக சூழ்ந்து பெண் டி.எஸ்.பி இடுப்பை பிடித்து இழுத்து வயற்றில் குத்தி, தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பிரச்சனைக்கு காரணமாக இருந்த முருகேசனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். என்ன காரணத்திற்காக போராட்டகாரர்கள் டி.எஸ்.பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தினர் என கேள்வி எழுந்துள்ளது.

திருச்சுழி அருகே கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த காளி குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் நேற்று முன்தினம் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இச்சம்பவத்தில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்று அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் கொலை செய்யப்பட்ட காலி குமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.‌ ஆனால் போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

அதனை தடுக்க முயன்ற அருப்புக்கோட்டை  டிஎஸ்பி காயத்திரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறியலில் ஈடுபட முயன்றவர்களை டி.எஸ்.பி. காயத்ரி தடுக்க முயன்ற போது, ஒருவர் டி.எஸ்.பியின் இடுப்பை பிடித்து இழுத்து வயற்றில் குத்தினார். அப்போது  டி.எஸ்.பி. காயத்ரி பலார் என்று அவரின் கண்ணத்தில் அரைந்தார். அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள், அவரின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டனர். உடனடியாக மற்ற போலீசார், அவர்களைத் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் டி.எஸ்.பியை தாக்கிய பாலமுருகன், முருகேசன், பொன்முருகன், ஜெயராமன் உள்ளிட்ட 8 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் டி.எஸ்.பி-யிடம் முதலில் வம்பிலுத்து பிரச்சனைக்கு காரணமாக இருந்த முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். 

இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்ட 16 அடையாளம் தெரிந்த மற்றும் அடையாளம் தெரியாத 100 நபர்கள் என 116 பேர் மீது  இரு சார்பு ஆய்வாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக ஒன்று கூடியது, தடையை மீறி மறியலில் ஈடுப்பட்டது உள்ளிட்ட இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீடியோக்கள்

பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரை மிதித்தபடி செல்லும் நிலை உள்ளது - TVK எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு !
மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரை மிதித்தபடி செல்லும் நிலை உள்ளது - TVK எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு !
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
Leema Rose Martin : ‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
Embed widget