மேலும் அறிய

அக்கா மீது செருப்பு வீச்சு! எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்

குடும்பத்தையும், அரசியலையும் விட்டு பிரிவதாக லாலு பிரசாத்தின் மகள் ரோகினி ஆச்சார்யா அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார். தேஜஸ்வி யாதவுக்கும் ரோகினிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாகவும், அவர் தனது அக்காவை செருப்பால் அடிக்க ஓங்கியதாவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் உதவியாளர் சஞ்சய் யாதவிற்கு கட்சியில் செல்வாக்கு அதிகரிப்பதால் அவரது சகோதரி ரோகினி ஆச்சார்யா கடுப்பில் இருந்ததாக பேசப்பட்டது. லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவை எக்ஸ் தளத்தில் பின் தொடர்வதை நிறுத்தினார் ரோகினி. அதுமட்டுமல்லாமல் 2022ம் ஆண்டு தனது தந்தைக்கு ரோகினி சிறுநீரகம் தானம் செய்திருந்தார். அது வேறு ஒருவருடைய சிறுநீரகம் என்ற விமர்சனமும் வந்தது. இதனால் கோபமான அவர், நான் எனது தந்தைக்கு சிறுநீரகத்தை வழங்கியது பொய் என யாராவது நிரூபித்தால் நான் அரசியலில் இருந்தே விலகிக் கொள்கிறேன் என சவால்விட்டுள்ளார். அப்படி இல்லையென்றால் இப்படி பேசியவர்களும், அவர்களை பேச சொன்னவர்களும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிலடி கொடுத்தார். தேஜஸ்வி யாதவின் குடும்ப பிரச்னை பீகார் தேர்தல் பிரச்சாரத்திலும் எதிரொலித்தது. குடும்ப பஞ்சாயத்தை முடிக்காமல் ஆட்சியை பிடிக்க ஆசையா என்று எதிர் தரப்பினர் விமர்சித்தனர்..

இந்தநிலையில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது ராஷ்டிரிய ஜனதா தளம். 143 இடங்களில் போட்டி போட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு ரோகினி ஆச்சார்யா தான் காரணம் என தேஜஸ்வி யாதவ் அவரது பக்கம் திருப்பி விட்டதாக சொல்கின்றனர். இதனை தொடர்ந்து தேஜஸ்வி யாதவுக்கு நெருக்கமானவர்கள் அரசியலை விட்டு விலக சொன்னதாகவும், அவர்கள் சொன்னது போலவே குடும்பத்தையும் அரசியலையும் விட்டு விலகுவதாக சொல்லி பரபரப்பை கிளப்பினார்.

இந்தநிலையில் தன்னை நோக்கி செருப்புகள் ஓங்கப்பட்டதாக பகீர் கிளப்பும் வகையில் சோசியல் மீடியாவில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். அதில் ”நேற்று ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு திருமணமான பெண், ஒரு தாய் அவமதிக்கப்பட்டார். மோசமான வார்த்தைகள் பேசி என்னை அடிக்க செருப்பை கையில் எடுத்தனர். நான் என் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. என்னை அவமானப்படுத்தினார்கள். ஒரு மகள் கட்டாயத்தின் பேரில் அழுதுகொண்டிருந்த பெற்றோரை விட்டுவிட்டு வந்தாள். அவர்கள் என்னை என் தாய் வீட்டிலிருந்து பிரித்து விட்டார்கள். என்னை அனாதை ஆக்கிவிட்டார்கள். எந்த குடும்பத்திற்கும் ரோகினி போன்ற மகளோ சகோதரியோ இருக்கக் கூடாது” என உடைந்து பதிவிட்டுள்ளார். வாக்குவாதத்தில் தேஜஸ்வி யாதவ் தான் செருப்பை ஓங்கியதாக பீகார் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. 

அதேபோல் கோடிக்கணக்கான பணத்தையும், மக்களவை தேர்தலில் சீட்டும் வாங்கிவிட்டு தான் நான் எனது தந்தைக்கும் சிறுநீரகம் தானம் செய்ததாக விமர்சிக்கிறார்கள் என ரோகினி ஆச்சார்யா வருத்தத்துடன் பேசியுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ரோகினி ஆச்சார்யா தோல்வியடைந்தார். இதனை வைத்து தான் சீட் வாங்கி கொண்டு அவர் சிறுநீரகம் செய்ததாக தேஜஸ்வி யாதவ் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர்.

ஏற்கனவே படுதோல்வியால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் உடைந்து போயுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்குள் வெடிக்கும் பிரச்னை கட்சியினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget