New Train In Tamilnadu : பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
New Train In Tamilnadu : தமிழக மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பாக 4 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவைகள் அதிகரித்தும், கூடுதல் நிறுத்தங்களையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ரயில் பயணத்தை விரும்பும் மக்கள்
பொதுமக்கள் வெளியூர் பயணமாக இருந்தாலும், நீண்ட தூர பயணமாக இருந்தாலும் ரயில் சேவையை அதிகளவில் விரும்பி பயணிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், குறைந்த கட்டணம் முக்கிய காரணமாக உள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக நாடு முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோடிக்கணக்கான மக்களும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இருந்த போதும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையே உள்ளது. 3 மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்தாலும் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்து விடுகிறது.
நிரம்பி வழியும் கூட்டம்
இதனால் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. பல ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநிலத்தவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் தான் தமிழக மக்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் புதிதாக 4 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாலக்காடு பொள்ளாச்சி இடையே பயணிகளுக்கான மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில், போத்தனூர் - தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில், திருநெல்வேலி - மங்களூரு விரைவு ரயில் ஆகிய நான்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 புதிய ரயில்கள்
மேலும் மங்களூரு - சென்ட்ரல் - ராமேஸ்வரம் விரைவு ரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவித்துள்ளார். இதே போல தாம்பரம் -ராமேஸ்வரம் விரைவு ரயில், பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் திருச்சி காரைக்குடி பயணிகள் ரயில் வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும். எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் போடி விரைவு ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரயில் அறிவிப்பால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு புதிய ரயில் அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், தமிழகத்திற்குப் புதிதாக கூடுதல் ரயில்களை இயக்குவது. சில வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தாம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாக அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.இந்த வேண்டுகோளை ஏற்று புதிய ரயில் மற்றும் கூடுதல் நிறுத்தம் அறிவித்தற்கு நன்றி தெரிவித்துள்ளார்.























