![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Annamalaiyar Temple: அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம்.. பிறம்மோற்சவ கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்..!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா அம்மன் சன்னதி தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் நடைப்பெறவுள்ளது.
![Annamalaiyar Temple: அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம்.. பிறம்மோற்சவ கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்..! Aadipuram Pirammotsava ten days festival will start tomorrow with flag hoisting at Annamalaiyar Temple Annamalaiyar Temple: அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம்.. பிறம்மோற்சவ கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/c84a0e432e359bb2c5add53b3478b2fd1689949672272113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்கள், கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபு. அண்ணாமலையார் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையில் 12 மாதங்களும் உற்சவம் நடைபெறும். அதேபோன்று ஆண்டுக்கு நான்கு முறை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் நடைபெறும்.கார்த்திகை தீபத் திருவிழா உற்சவம், ஆனி பிரம்மோற்சவம் உற்சவம், மார்கழி மாதத்தில் உத்ராயண புண்ணியகாலம் உற்சவம் மற்றும் ஆடி பூரம் உற்சவம் ஆகியவற்றை நடைபெறும். அதில் மூன்று கொடியேற்றம் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றமும் ஒரு கொடியேற்றம் உண்ணமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்படும், ஜோதிட ரீதியாக ஆடி மாதம் சந்திரன் வீடான கடக ராசிக்கு சூரியன் வரும் காலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
மேலும் சூரியன் தென் திசை நோக்கி இந்த மாதத்தில் தான் பயணத்தை தொடங்கும். அதன்படி இந்த மாதத்தில் வரும் ஆடி வெள்ளி, செவ்வாய் மற்றும் பௌர்ணமி, பூரண நட்சத்திர அமாவாசை, ஆடி 18 ஆகிய நாட்களில் அம்மன் கோவில்களில் வழிபடுவது புனிதமாக கருதப்படுகிறது. இதனால்தான் கிராமப்புறங்களில் கூழ் வார்த்தால், பூ கரகம் எடுத்தல், தீமிதி திருவிழா வழிபாடுகள் நடைபெறும்இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலில் தனி சன்னதியாக எழுந்தருளிய உண்ணாமுலை அம்மன் சன்னதியில் அருகே உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழாவினை முன்னிட்டு சனிகிழமை அதிகாலையில், 5;30 மணிக்கு மேல் 6;45 மணிக்குள் கடக லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதம் மந்திரங்கள் முழுங்க கொடியேற்றும் விழா நடைபெறும்.
அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறும். மேலும், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடைபெறும். அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. சிவன் கோயில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அண்ணாமலையார் கோயிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, வரும் 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் பவனிவந்து அருள்பாலிக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)