மேலும் அறிய
Rajinikanth : ‘சேகர் பாபுவிற்கு பாட்ஷா மாதிரி இன்னொரு முகம் இருக்கு..’ புகைப்பட கண்காட்சியில் பேசிய ரஜினி!
Rajinikanth on Photo exhibition : ‘சேகர் பாபு ரொம்ப அன்பானவர்.. அவருக்கு இன்னொரு முகம் இருக்கு..’பாட்ஷா மாதிரி என்று பேசியுள்ளார் ரஜினிகாந்த்

புகைப்பட கண்காட்சியில் அமைச்சர் சேகர் பாபுவுடன் ரஜினிகாந்த்
1/9

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘எங்கள் முதல்வன் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் திமுகவினர் புகைப்பட கண்காட்சி அமைத்துள்ளனர்.
2/9

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிப்ரவரி 28 ஆம் தேதி திறந்து வைத்தார்.
3/9

இந்த புகைப்பட கண்காட்சியில் மு.க.ஸ்டாலினின் சிறு வயது புகைப்படம், கருணாநிதியுடன் இருந்த தருணங்கள், மிசா காலத்தில் சிறையில் பட்ட கஷ்டங்கள் என பல அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
4/9

இதனை திமுகவினர், கூட்டணி கட்சியினர் தவிர ஏராளமான பொதுமக்களும் பார்வையிட்டு வருகின்றனர்.
5/9

அந்த வகையில் இன்றைய தினம் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.
6/9

அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களோடு தானும், மு.க.ஸ்டாலினும் எடுத்த புகைப்படத்தையும் பார்த்து நெகிழ்ந்தார்.
7/9

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரொம்ப அருமையான ஒரு கண்காட்சி. என்னை ரொம்ப நாளா கூப்பிட்டே இருந்தாங்க. நான் ஷூட்டிங்கில் இருந்ததால வர முடியலஎன கூறினார்.
8/9

இந்த கண்காட்சியை பார்க்கும் போது என்னுடைய இனிய நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், 54 ஆண்டுகள் அரசியல் பயணம் என அனைத்தும் நினைவுக்கு வருகின்றது - ஸ்டாலின்
9/9

இந்த சந்திப்பின் போது அமைச்சர் சேகர்பாபுவும் உடனிருந்தார். அவரைப் பற்றி பேசிய ரஜினிகாந்த், “அமைச்சர் சேகர்பாபு ரொம்ப அன்பானவர். விசுவாசமானவர். அவருக்கு பாட்ஷா மாதிரி இன்னொரு முகமும் இருக்கு” என கூறினார்.
Published at : 11 Mar 2023 12:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
கல்வி
ஃபேக்ட் செக்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion